மாநகராட்சி ஒப்பந்த சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வந்த ஒப்பந்த பணியாளர்கள் 81 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் ஐகோர்ட் இவ்வாறு கூறியுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுக்க உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். தூய்மை பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்த அளவிலான ஊதியமே இவர்களுக்கு வழங்கப்படுவதால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் நீண்ட கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வந்த 81 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் அந்த மனுவில், 3 ஆண்டுகள் பணி செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ள ஒப்பந்த சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications