மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு
சென்னை: மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்பட்ட புகாரின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 18-ம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில், காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதாக திருமாவளவன் மீது இந்து மக்கள் முன்னணி அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி அமைப்பாளரான நாராயணன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் மே 18 நடந்த இலங்கையிலுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்வில பேசிய திருமாவளவன், கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு ஆதரவாக சில கருத்துகளை முன் வைத்து பேசினார்.
மேலும் ஒரு படி மேலே போய் கோட்சேவை இந்து தீவிரவாதி அல்ல பயங்கரவாதி என்று சொல்லிவிட்டு, அதற்காக ஆங்கிலத்தில் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார். கோட்சே குறித்து பேசியதோடு நில்லாமல், காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி. அவரை கொலை செய்த கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என தாக்கி பேசியுள்ளார்.
தேசப்பிதா என போற்றப்படும் மகாத்மா காந்தியை இந்து தீவிரவாதி என்று கூறி, இந்துக்கள் தான் நாட்டின் பயங்கரவாதிகள் என்பது போல சித்தரித்துள்ளார்
மேலும் கோட்சே குறித்து கமல் பேசியதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் முன்ஜாமீன் கோரியிருந்த போது, காந்தி அல்லது கோட்சே குறித்து தலைவர்கள் யாரும் விவாதிக்கவோ, பேசவோ கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மீறி தான் திருமாவளவன் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து விமர்சிக்கும் திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த புகார் மனுவின் அடிப்படையில், காந்தி மற்றும் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக, திருமாவளவன் மீது சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில், 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications