மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு
சென்னை: மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்பட்ட புகாரின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 18-ம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில், காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதாக திருமாவளவன் மீது இந்து மக்கள் முன்னணி அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி அமைப்பாளரான நாராயணன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் மே 18 நடந்த இலங்கையிலுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்வில பேசிய திருமாவளவன், கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு ஆதரவாக சில கருத்துகளை முன் வைத்து பேசினார்.
மேலும் ஒரு படி மேலே போய் கோட்சேவை இந்து தீவிரவாதி அல்ல பயங்கரவாதி என்று சொல்லிவிட்டு, அதற்காக ஆங்கிலத்தில் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார். கோட்சே குறித்து பேசியதோடு நில்லாமல், காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி. அவரை கொலை செய்த கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என தாக்கி பேசியுள்ளார்.
தேசப்பிதா என போற்றப்படும் மகாத்மா காந்தியை இந்து தீவிரவாதி என்று கூறி, இந்துக்கள் தான் நாட்டின் பயங்கரவாதிகள் என்பது போல சித்தரித்துள்ளார்
மேலும் கோட்சே குறித்து கமல் பேசியதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் முன்ஜாமீன் கோரியிருந்த போது, காந்தி அல்லது கோட்சே குறித்து தலைவர்கள் யாரும் விவாதிக்கவோ, பேசவோ கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மீறி தான் திருமாவளவன் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து விமர்சிக்கும் திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த புகார் மனுவின் அடிப்படையில், காந்தி மற்றும் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக, திருமாவளவன் மீது சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில், 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications