கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? முட்டி மோதும் விருதுநகர்! திணறுதா 187 சங்கங்கள்
சென்னை: தேர்தல் வருவதால் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 187 கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதுகின்றனர்.. கடந்த தேர்தலில் உதயநிதி கொடுத்த வாக்குறுதி போல இப்போதும் யாராவது தள்ளுபடி அறிவிப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதால், மேற்கொண்டு கடன் கொடுக்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திண்டாடி வருகின்றன.. விருதுநகர் கூட்டுறவு சங்கத்தில் என்ன நடக்கிறது?
தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் கூட்டுறவு சங்கங்கள், சாமானிய மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன..

குறிப்பாக ஏழை எளிய விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர்க்கடன் வழங்குவதும், அவசரத் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து உடனடி நிதி பெறுவதும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த அம்சங்களாகும்..
கூட்டுறவு கடன் சங்கங்கள்
விரைவில் தேர்தல் வருகிறது.. இந்த நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 187 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள பலரும் கடன் பெறுவதற்காக திரண்டு வருகின்றனர்..
விவசாயிகளுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் பேரிடியாக அமையும் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது, அவர்களின் வாழ்நாள் சுமையைக் குறைக்கும் ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது..
கடந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமான மக்கள் கடன் வாங்கினார்கள்.. இந்தத் தள்ளுபடி அறிவிப்புகள் ஏழை மக்களின் பணத் தேவையைத் தீர்த்து, அவர்கள் பழைய கடன்களில் இருந்து விடுபட ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.. தற்போது 2026 தேர்தலிலும் இது போன்ற தள்ளுபடி வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் மீண்டும் கூட்டுறவு சங்கங்களை நோக்கி வருகிறார்கள்..
பயிர்க்கடன் - நகைக் கடன்
இருந்தாலும், இந்த நன்மைகளுக்கு பின்னால் சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.. மாவட்டத்தில் உள்ள 187 சங்கங்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை கடும் நிதி நெருக்கடியால் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன..
2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.245 கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கடன்களை வழங்க நிதி இன்றி சங்கங்கள் திண்டாடி வருகின்றன..
வட்டி மானியங்கள்
அரசு அறிவிக்கும் தள்ளுபடிகளால் வரவேண்டிய வட்டி மானியங்கள் முறையாக வந்து சேராததே இந்த நிதித் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.. கடந்த முறை தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி சொன்னதை நம்பி நகைக்கடன் வைத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், இந்த முறையும் யாராவது தள்ளுபடி அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் சங்கங்களை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்..
ஆட்சி மாறும் போதெல்லாம் கிடைக்கும் இத்தகைய கடன் தள்ளுபடிகள் தனிப்பட்ட முறையில் பயனாளிகளுக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், கூட்டுறவு அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றன..
நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ் எப்போது
அன்றாட தேவைகளுக்காகவும் தேர்தல் கால சலுகைகளுக்காகவும் கடன் கேட்டு வரும் மக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஆனால் நிதி வளமோ வறண்டு காணப்படுவதால், தர்மசங்கடமான சூழலில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்..
இந்த ஆண்டும் மீண்டும் ஒரு தள்ளுபடி அறிவிப்பு வெளியானால், ஏற்கனவே தள்ளாடி வரும் சங்கங்கள் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்ற அச்சமும் ஒருபுறம் நிலவுகிறது.. எது எப்படியிருப்பினும், ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் இத்தகைய கூட்டுறவு அமைப்புகளைக் காப்பதும், அதே சமயம் மக்களுக்குத் தேவையான நிதி உதவிகள் தடையின்றி கிடைப்பதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications