தீயாக பரவும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்கள் ரிஸ்க் தான்... சுகாதார துறை புதிய கட்டுப்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

4ஆம் நாளாக 2000ஐ கடந்த கொரோனா

4ஆம் நாளாக 2000ஐ கடந்த கொரோனா

தமிழகத்தில் 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 8,84,094 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் மாநிலத்தில் 83,154 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 1,95,11,655 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழப்பும் டிஸ்சார்ஜும்

உயிரிழப்பும் டிஸ்சார்ஜும்

இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 12,700ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,463 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 8,56,548 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுதவதும் 14,846 பேர் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 மாவட்டங்கள் கஷ்டம்

5 மாவட்டங்கள் கஷ்டம்

சென்னை, செங்கல்பட்டு, கோவை, தஞ்சை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது. சென்னையில் 874 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 242 பேருக்கும் கோவையில் 207 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சையில் 114 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 100 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதார துறை

தமிழ்நாடு சுகாதார துறை

தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மாணவர்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல பொது நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கவும் Contact Tracingஐ அதிகப்படுத்தவும் தமிழக சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+