சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் திடீரென உயர்ந்த கொரோனா.. சென்னையில் மட்டும் 294 பேர் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திடீரென கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள நிலையில், இன்றும் மட்டும் மேலும் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,46,000 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,46,000 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பைவிட சற்றே கூடுதலாக உள்ளது.

மும்பையில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா உறுதி- 82% அதிகரிப்பு! மும்பையில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா உறுதி- 82% அதிகரிப்பு!

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 614 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,02,588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,758 ஆக உயர்ந்துள்ளது.

8 பேர் உயிரிழப்பு

8 பேர் உயிரிழப்பு

கொரோனா காரனமாக தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும், அரசு மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 294 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 5,62,008 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

இதுவரை 5,72,34,367 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 1,03,897 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம்16,02,806 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 424 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

பெண்களில் இதுவரை மொத்தம் 11,43,156 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும்315 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
With the sudden rise in the number of coronaviruses in Tamil Nadu, the number of confirmed cases has risen to 27,46,000 with 739 more confirmed cases today, the state health department said in a statement today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X