சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா : தினசரி 25000 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை - ககன்தீப் சிங் பேடி
ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 25,000 ஆக அதிகரிக்க அலுவலர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா முதற்கட்ட பரிசோதனை மையங்களை 11இல் இருந்து 15 ஆக உயர்த்தவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் போது கடந்த மே மாதம் சென்னையில் 7,564 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு, படிப்படியாக குறைந்து கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி 105ஆக பதிவானது. கடந்த வாரம் வரை தினசரி பாதிப்பு 115 முதல் 132 வரையே பதிவாகி வந்தது. தற்போது, சென்னையில் புதிய பாதிப்பு 200 ஐ தொட்டுள்ளது.

சென்னையில் ஓமிக்ரான் பரவலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவருகிறது.
சென்னையில் வசிப்பவர்கள் முகக்கவசம் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் தற்சமயம் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 22,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 25,000 ஆக அதிகரிக்க அலுவலர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் அனைத்து மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்ற பணி இடங்கள், கல்லூரிகள்,கல்வி நிறுவனங்களின் விடுதிகள் தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் பொதுமக்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு அதனடிப்படையில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடற் பரிசோதனை செய்யும் ஸ்கிரீனிங் சென்டர் ஏற்கனவே 11 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் 15 இடங்களில் முதற்கட்ட பரிசோதனை மையங்களை செயல்படுத்தவும் தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதற்கட்ட உடற் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்ல மாநகராட்சியின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 24 வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல நல மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications