தமிழகத்தில் 10 நாட்களில் 73% உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்.. இந்த 7 மாவட்டங்கள் வைரஸ் பரவல் மிக மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் 73% உயர்ந்துள்ள நிலையில், கோவை, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வைரஸ் பரவல் அதிவேகமாக உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சில தினங்களாகக் குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1299 சிறார்கள் உட்பட 35,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நிலையில், தினசரி கொரோனா உயிரிழப்பும் 397ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து டிராக்டர் விஜயானந்த் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்தது அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 171094 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 35579 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் தற்போது பாசிடிவ் விகிதம் 22%ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 2,53,576 இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 2,63,390ஆக உயர்ந்துள்ளது கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 73% உயர்ந்துள்ளது.
குறிப்பாகக் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கொரோனா பரவல் மோசமாக உள்ளதால், அம்மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.











Click it and Unblock the Notifications