பதட்டத்தில் பெற்றோர்கள்! பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல், புதன் கிழமையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத்துறை சார்பில், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் மழுவதும் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில், தடுப்பூசி சேலுத்துவதற்கு தகுதியானவர்கள், தங்களது வீடு அருகேயுள்ள சிறப்பு முகாம்களுக்குச் சென்ற தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.

இன்று 37-வது சிறப்பு முகாம்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 37-வது சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்கள் என 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தவணை தடுப்பூசிகள்
கொரோனா தடுப்பூசியை இதுவரை செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். மேலும், ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு, 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்த வேண்டிய நபர்களும், இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமுக்குச் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

புதன்கிழமை தடுப்பூசி முகாம்
இந்நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள், அடுத்த மாதம் முதல் இனி வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்ததாகவும், இதுவரை மொத்தம் 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளிக்குச் சென்று தடுப்பூசி
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என கூறினார்.

பள்ளிக்கு விடுமுறை இல்லை
குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சல் தொடர்பாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என அவர் தெரிவித்தார். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications