கொரோனா: 1000 ரூபாயை வீடு வீடா போய் கொடுங்க - ரேசன் கடைகளை திறக்காதீங்க
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை வீடுகளுக்கு சென்று மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு
சென்னை: பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களிலும் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை வீடுகளுக்கு சென்று மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைகளை திறந்து நிவாரண உதவியை வழங்கும் ரேசன் கடை பணியாளர்கள் மீதும், அதனை கண்காணிக்க தவறும் சார்நிலை அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அரிசி ரேசன் கார்டு வைத்திருப்போருக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 21.83 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்கு 1000 ரூபாயை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 22.06.2020 முதல் 26.06.2020 வரை ரேசன் கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில இடங்களில் ரேசன் கடைகளை திறப்பதாகவும், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரணத்தொகை வழங்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று வழங்குவதற்கு பதிலாக,ஆங்காங்கே மொத்தமாக வரவழைத்தும் நிவாரண உதவியை வழங்கி உள்ளனர். இதையடுத்து பல புகார்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை வீடுகளுக்கு சென்று மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என்றும், ரேசன் கடைகளில் வைத்து கொடுக்க கூடாது என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேசன் கடைகளை திறக்கக்கூடாது என்று கூட்டுறவு துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது. கடைகளை திறந்து நிவாரண உதவியை வழங்கும் ரேசன் கடை பணியாளர்கள் மீதும், அதனை கண்காணிக்க தவறும் சார்நிலை அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications