பிப்ரவரி மாசமே ஏன் தடை போடல.. வெளிநாட்டிலிருந்து வர ஏன் அனுமதி தந்தீங்க.. விளாசும் சு.சாமி
மத்திய அரசுக்கு சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: பிப்ரவரி மாசமே வெளிநாட்டுல இருந்து வர்றவங்களுக்கு தடை விதிச்சிருக்கலாமே.. அப்படியே வந்தவங்களையும் 14 நாட்கள் ஏர்போர்ட்டிலேயே தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காதே.. குழப்பமும் ஏற்பட்டிருக்காதே.. மத்திய அரசு ஏன் அந்த நடவடிக்கையை முன்னரே எடுக்கவில்லை" என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக சுப்பிரமணிய சாமி கேள்வி கேட்டுள்ளார்!
Recommended Video
பாஜக மூத்த தலைவர் சு.சாமிக்கிட்ட இருந்து எந்த ட்வீட் வந்தாலும், முதலில் அடிவயிற்றில் அள்ளு கிளம்புவது பாஜகவுக்குதான். காரணம் எப்பவுமே சேம் சைட் கோல் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து பாஜகவில் நீடித்தும் வருகிறார்.

இதற்கு காரணம், காங்கிரஸ் தலைவர்கள் பலரை கேஸ் போட்டு சிக்கலில் மாட்டி வைத்தவர், மாட்டி வைத்தும் வருபவர்.. இது பாஜக தலைமைக்கு பெரிய பிளஸ்ஸாக இருப்பதால்தான் சாமியை கண்டு கொள்ளாமல் உள்ளது பாஜக.
சொந்த கட்சிக்கே அடிக்கடி சூன்யம் வைக்கும், சுப்பிரமணியசாமி இப்போது சரியான ஒரு கேள்வி எழுப்பி அதன் மூலம் மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.. டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கூடியுள்ளதாக சர்ச்சையாகி வருகிறது... இதை வைத்து மத ரீதியான விவகாரமும் வெடித்து திசை திருப்பப்பட்டு வருகிறது.
வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை கூடிவருவதையொட்டி சு.சாமி தன்னுடைய ட்வீட்டில் "வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு பிப்ரவரி மாதமே ((ஃபிப்ரவரி 1-ம் தேதி வாக்கில்) தடை விதித்திருந்தால் தப்லீக் மாநாடு தொடர்பாக எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது.. வெளிநாட்டவர்கள் முன்கூட்டியே வர தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய இந்தியர்களை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தியிருந்தால் இந்த குழப்பமே எழுந்திருக்காது. இந்த தடை ஏன் தாமதமானது?" என்று கேட்டுள்ளார்.
சீனாவில் தொற்று இருப்பதும், அது உலக நாடுகளுக்கு பரவி கொண்டிருப்பதும் தெரிந்தும், பிப்ரவரி மாதமே தனிமைப்படுத்தும் அறிவிப்பை மத்திய அரசு ஏன் மேற்கொள்ளவில்லை என்ற இதே கேள்வியைதான் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை பார்த்து கேட்டு வருகின்றன.. அதே கேள்வியை பாஜக மூத்த தலைவர் சு.சாமியும் எழுப்பி மத்திய அரசு மீது குறை கூறியிருப்பது சலசலப்பை தந்து வருகிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications