கட்டுக்கடங்காத வேகம்.. இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா கேஸ்கள் அதிகம் வந்து கொண்டு இருக்கிறது.
முக்கியமாக கடந்த நான்கு நாட்களில் மொத்தம் 3 நாட்கள் 800க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையிலும் தினமும் 600+ கேஸ்கள் பதிவாகி வருகிறது.

தமிழகம் நிலை
தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20246 ஆக உள்ளது. தமிழகத்தின் கிராப் வேகமாக முன்னேறி வருகிறது.

சென்னை நிலை
சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 11362 பேர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு மோசமடைந்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு காரணமாக ஸ்டேஜ் 3 பரவல் ஏற்பட்டது. தற்போது கோயம்பேடு பாதிப்பு கொஞ்சம் குறைந்தும் கூட கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,313 ஆக அதிகரித்தது.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 8776 ஆகவும். இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் தமிழகத்தில் 154 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications