தமிழகம் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்: சென்னையில் 982 பேர் பாதிப்பு

சென்னையில் இன்று கொரோனாவிற்கு 982 பேரும் கோவையில் 648 பேரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று மட்டும் 982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156625 ஆக லட்சமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5492 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிகை அதிகரித்து வருகிறது.

Coronavirus updates: District wise covid 19 affected September 21

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,47,337 பேராக உயர்ந்துள்ளது. 46495 பேர் தமிழகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 60 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8871 பேராக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 80,672 பேரில், 5,344 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 65,55,328 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று செப்டம்பர் 21ஆம் தேதி புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

  • அரியலூர் - 28
  • செங்கல்பட்டு - 219
  • சென்னை - 982
  • கோவை - 648
  • கடலூர் - 153
  • தர்மபுரி - 89
  • திண்டுக்கல் - 73
  • ஈரோடு - 201
  • கள்ளக்குறிச்சி - 105
  • காஞ்சிபுரம் - 117
  • கன்னியாகுமரி - 97
  • கரூர் - 54
  • கிருஷ்ணகிரி - 91
  • மதுரை - 85
  • நாகை - 89
  • நாமக்கல் - 130
  • நீலகிரி - 122
  • பெரம்பலூர் -10
  • புதுக்கோட்டை - 98
  • ராமநாதபுரம் - 15
  • ராணிப்பேட்டை - 79
  • சேலம் - 295
  • சிவகங்கை - 41
  • தென்காசி - 65
  • தஞ்சை - 136
  • தேனி - 67
  • திருப்பத்தூர் - 108
  • திருவள்ளூர் - 212
  • திருவண்ணாமலை - 97
  • திருவாரூர் - 120
  • தூத்துக்குடி - 96
  • திருநெல்வேலி - 87
  • திருப்பூர் - 161
  • திருச்சி - 80
  • வேலூர் - 139
  • விழுப்புரம் - 127
  • விருதுநகர் - 35

இன்றைய தினம் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+