என்னங்க இது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இப்படி வேகமாக உயருது.. சென்னையும் மிக மோசம்.. உஷார் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ந்து கொரோனா ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது.
அடேங்கப்பா.. கிடா, சேவல்.. மெகா கறி விருந்து! ஆண்களுக்கு மட்டுமே அனுமதி! ஒன்று கூடிய 10 ஆயிரம் பேர்
கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு
இதனால் மொத்த பாதிப்பு 27,49,534 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, கோவையில் தலா ஒருவர் இறந்துள்ளனர், இதுவரை கொரோனாவுக்கு 36,784 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 611 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,04,410 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.
சென்னையில் அதிவேகம்
8,340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,03,403 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,66,08,042 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 682 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டிலும் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
2 மாவட்டங்களில் சதம்
கோவையில் 75 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 168 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 31 பேருக்கும், திருவள்ளூரில் 70 பேருக்கும், திருச்சியில் 21 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 44 பேருக்கும், ஈரோட்டில் 35 பேருக்கும், சேலத்தில் 30 பேருக்கும், நாமக்கல்லில் 17 பேருக்கும், தஞ்சாவூரில் 13 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.