Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகர கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் இனிமேல் கிடையாதா? விவசாயிகளுக்கான தமிழக அரசு திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகரமயமாக்கல் நடவடிக்கை காரணமாக, நகைக்கடன், சிறு வணிகக்கடன் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. இதற்காக நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன் வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அதிமுக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.. என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கிஷான் கிரடிட் கார்டு (KCC) மூலம் 7 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.

Crop Loan urban cooperative society tamil nadu government

விவசாயிகளுக்கு பயிர் கடன்

இது தவிர, நகைக்கடன், விசைத்தறி கடன், கால்நடைக் கடன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதை ஓராண்டு காலத்துக்குள் செலுத்திவிட்டால் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கங்களும் பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல வகை கடன்களை தாராளமாக வழங்கி வருகின்றன..

தமிழகம் முழுவதிலும், 119 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 56 சங்கங்கள் தன்னுடைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடனை உள்ளடக்கிய வேளாண் கடன்களை வழங்கி வருகின்றன.

வேளாண் பயிர்க் கடன்

இதில், நகர கூட்டுறவு வங்கிகளை பொறுத்தவரை, நகைக்கடன், சிறு வணிகக்கடன், வீட்டு அடமான கடன், வீடு கட்ட மற்றும் மனை வாங்க கடன்கள் வழங்கப்படுகின்றன... சில நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்த அளவிலும் வேளாண் கடன்கள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், நகரமயமாக்கலால் வீட்டு கடன், சிறு வணிகக் கடன்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதாவது, நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், கடந்த 2024 - 25ல் அனைத்து பிரிவுகளிலும், ரூ.2,985 கோடி கடன்கள் வழங்கப்பட்டதில், வேளாண் கடனின் பங்கு, 75 கோடி ரூபாய் மட்டுமே என்கிறார்கள்..

எனவேதான், அந்த சங்கங்களில் வழங்கப்படும் வேளாண் கடன்கள், அருகிலுள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நகர கூட்டுறவு கடன் சங்கம்

அதாவது நகர கூட்டுறவு கடன் சங்கங்களால் வழங்கப்படும் வேளாண் கடன்களின் பயனாளிகளை கண்டறிந்து, அந்த கடன்களை, நகர கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மாற்றம் செய்ய, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சங்க உறுப்பினர்களுக்கு இந்த மாற்றம் குறித்த விவரத்தை தெரிவிப்பதுடன், உரிய முறையில் தடையில்லா சான்றிதழ் வழங்கும் பணிகளை மேற்கொள்ள, மண்டல இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கூட்டுறவு சங்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நகர்ப்புற தேவைகள் அதிகரித்து வருவதால், அவைகளை பூர்த்தி செய்வதில் கூட்டுறவு துறை அக்கறை காட்டி வரும் நிலையில், இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

முதுகெலும்பை முறிக்கிறதா?

ஆனால், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன் வழங்குவது நிறுத்தப்பட உள்ளதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து வருகிறது. .

"விவசாயக் கடன் வெறும் ரூ.75 கோடி என்பதற்கே துடித்த அரசு, ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழலில் வீணாகின்றன என்பதை மறைக்க முடியாது. வீடு, நகை, வணிக கடன் வழங்க வங்கிகள் ஏராளம்.. ஆனால் விவசாயிக்கு மட்டும் கதவுகள் மூடப்படுகிறது. இது நீதியா?

56 நகர கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்தின் பங்கு அழிக்கப்பட்டது.. இதுவே திமுகவின் உண்மையான விவசாயக் கொள்கை.. "விவசாயிகள் எங்கள் முதுகெலும்பு" என்று சொல்லும் திமுக, அந்த முதுகெலும்பை முறிக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+