Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு இலவச ரீசார்ஜ் என முதல்வர் ஸ்டாலின் பெயரில் பரவும் மெசேஜ்.. சைபர் கிரைம் போலீசார் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் 3 மாத இலவச ரீசார்ஜ் வழங்குவதாக சமூக வலைதளங்களில், ஒரு லிங்க் உடன் தகவல் பரவி வருகிறது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் செல்போன் சேவை கட்டணத்தை கடந்த ஜூலை மாதம் அதிரடியாக உயர்த்தியது ஜியோ நிறுவனம். 25% வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வந்தது. ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்பட்டது. தினசரி 1 ஜிபி நெட் வழங்கும் திட்டமானது ரூ. 209 ஆக இருந்து வந்த நிலையில் இந்த ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்த்தப்பட்டது.

jio airtel vodafone recharge cyber crime


செல்போன் சேவை கட்டண உயர்வைப் பொறுத்தவரை எப்போதும் முதலில் ஒரு நிறுவனம் உயர்த்தினால் மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திவிடும். அந்தவகையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தின. இந்த கட்டண உயர்வால் கோடிக்கணக்கான செல்போன் பயன்பாட்டாளர்கள் மாதந்தோறும் அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய செல்போன் வாடிக்கையாளர்கள் பலரும், புலம்பிக்கொண்டே அதிக தொகை கொடுத்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஆசை காட்டி, மோசடி செய்யும் கும்பல், ஆஃபர் எனக் கூறி அப்பாவி மக்களை குறி வைத்து களமிறங்கி உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரில் ஒரு குறுஞ்செய்தி பரவி வருகிறது. அதில், 'புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை' என்ற தலைப்புடன், 'புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும், 2 மாத ரீசார்ஜ், 749 ரூபாய் முற்றிலும் இலவசம் எனக் குறிப்பிட்டு, ஒரு இணைய லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

jio airtel vodafone recharge cyber crime


வாடிக்கையாளர்கள் இதனை நம்பி உள்ளே சென்றால் நமது தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதோடு, மோசடி பணப் பரிவர்த்தனை மூலமாக நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படவும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற லிங்க்கை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால், அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் கும்பலை நம்பி பணத்தை தொலைக்க வேண்டாம். பொதுமக்கள் யாரும், போலியான ஆஃபர் ரீசார்ஜ் விளம்பரங்களை நம்பி மோசடிக்கு ஆளாக வேண்டாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+