வருமான வரி நோட்டீஸ் வந்ததால் சிலிண்டர் நாடகம்.. பாஜக நிர்வாகி பேச்சுக்கு ஹோட்டல் சங்கம் எதிர்ப்பு
சென்னை: வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததை கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பியதால் தான் ஹோட்டல் உரிமையாளர்கள் சமையல் கேஸ் சிலிண்டர் இல்லை என நாடகமாடுகிறார்கள் என்று பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாஜக மாநில செயலர் அஸ்வத்தமான் கூறுகையில், கடந்த மார்ச் 9ம் தேதி வருமான வரித்துறையில் இருந்து நாடு முழுவதும் 62000 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் போலியாக வருமானத்தை மறைத்து அரசுக்கு வரி செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பு செய்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்,

மேலும் இதனை வருமான வரித்துறை கண்டுபிடித்து, 62 ஹோட்டல்களில் ஆய்வு செய்ததில் 408 காடி வருமானம் மறைத்தது தெரியவந்தது. இந்த விவரம் மதியம் நோட்டீஸாக அனுப்பப்பட்டதும், அன்றிரவு கேஸ் தீர்ந்துவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறார்கள் என அஸ்வத்தமான் கூறியிருந்தார்.
இது குறித்து சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறுகையில், ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறையில் யாரு முறைகேடு செய்ய முடியாது என மத்திய நிதித்துறை அமைச்சரே அறிவித்துவிட்ட நிலையில் என்னை நிறுவனங்களின் தவறுகளை தமிழகத்தில் உள்ளவர்களை நோக்கி மாற்றி விடுவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளளார்,
வணிக சமையல் சிலிண்டர், நான்கு நாட்களாக கிடைக்கவில்லை.. இதனை எண்ணெய் நிறுவனங்களே தெரிவித்துவிட்டன. யாராவது செய்த தவறுக்கு தமிழத்தில் உள்ளவர்களை குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காடடமாக கூறினார்.
வருமான வரித்துறை கடந்த மார்ச் 9ம் தேதி அனுப்பிய நோட்டீஸ் என்ன
வருமான வரித்துறை கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஓட்டல்களில் நடத்திய ஆய்வின் மூலம் உணவகங்கள் பின்பற்றும் முறையற்ற வரி ஏய்ப்பு உத்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பரிவர்த்தனை தரவுகள் AI தொழில்நுட்பம் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. உணவகங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் (ITR) காட்டிய வருவாய்க்கும், உண்மையில் நடந்த பரிவர்த்தனைகளுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பல உணவகங்கள் தங்களின் உண்மையான விற்பனையை குறைத்துக் காட்டுவதற்காக மொத்த பில்களை நீக்குதல் (Deletion of bulk bills) மற்றும் கணக்குகளில் மாற்றங்களைச் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன. சில விற்பனைப் பதிவுகள் நிதி கணக்குகளிலோ அல்லது வரித் தாக்கல் படிவங்களிலோ முழுமையாகக் காட்டப்படவில்லை. சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் திட்டமிட்டே விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
22 மாநிலங்களில் உள்ள 46 நகரங்களில் மொத்தம் 62 உணவகங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சுமார் ₹408 கோடி மதிப்பிலான விற்பனை வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரி செலுத்துவோர் தாங்களாகவே முன்வந்து உண்மையான வருமானத்தைத் தெரிவிக்கும் "நம்பிக்கை சார்ந்த அணுகுமுறையை" வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications