சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயில் பயணத்தில் ரிசர்வேசன் செய்யாதவர்களும் படுக்கை வசதியில் பயணிக்கலாம் எப்படி தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

De-reservation of coaches by trains: non-reserved passengers can travel in sleeper accommodation

டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும். கும்பகோணம் வழியே செல்லும் எழும்பூர் - ராமேஸ்வரம் ரயிலில் எஸ் 12 , எஸ் 13 பெட்டிகள் டிரிசர்வ்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை வசதி பெட்டிகள், குறிப்பிட்ட சில நகரங்களுக்கிடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

பிடிஆர் சொல்றத விடுங்க.. “இலவச திட்டம்” அறிவித்த அரியானா பாஜக அரசு! இயற்கை விவசாயத்துக்கு திட்டம் பிடிஆர் சொல்றத விடுங்க.. “இலவச திட்டம்” அறிவித்த அரியானா பாஜக அரசு! இயற்கை விவசாயத்துக்கு திட்டம்

வண்டி எண்: 16382 கன்னியாகுமரி-புனே இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் கன்னியாகுமரி-எர்ணாகுளம் இடையே எஸ்-5 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

வண்டி எண் 22638 மங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி முதல் ஈரோடு-எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 16723 எழும்பூர்-கொல்லம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி முதல் நெல்லை-கொல்லம் இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

வண்டி எண் 16724 கொல்லம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முதல் கொல்லம்-நெல்லை இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

வண்டி எண் 22637 எம்.ஜி.ஆர் சென்ட்ரல் -மங்களூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி முதல் எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-சேலம் இடையே எஸ்-4 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

ராமேஸ்வரம், மங்களூரு எக்ஸ்பிரஸ் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முதல் மானாமதுரை-ராமேஸ்வரம் இடையேவும், ராமேஸ்வரம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையேவும் எஸ்-12, எஸ்-13 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

எழும்பூர்-மங்களூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் திருச்சி-மங்களூரு இடையே எஸ்-10 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.

மங்களூரு-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் மங்களூரு-திருச்சி இடையே எஸ்-7 பெட்டியும், மங்களூரு-கரூர் இடையே எஸ்-8, எஸ்-9, எஸ்-10 படுக்கை பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.

தூத்துக்குடி-மைசூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் தூத்துக்குடி-மதுரை இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
On Southern Railway, some of sleeper class coaches of various trains are de- reserved coaches over specific sections only. முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகம் அனுமதி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X