சென்னை மண்ணில் 'தல' தோனி கூறிய அந்த ஒற்றை வார்த்தை.. சி.எஸ்.கே பேன்ஸ் செம ஹேப்பி அண்ணாச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த 14-வது ஐ.பி.எல் போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(சி.எஸ்.கே) கெத்தாக கோப்பையை கைப்பற்றியது. ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா நடத்த சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கோப்பையை கைப்பற்றிய சி.எஸ்.கே அணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது. இந்த பாராட்டு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்

சி.எஸ்.கே.வுக்கு பாராட்டு விழா

சி.எஸ்.கே.வுக்கு பாராட்டு விழா

மேலும், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உள்ளிட்ட பலர் பாராட்டு விழாவில் பங்கேற்றனர். விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கத்தில் தோனி அமர்ந்து இருந்தார். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், '' நான் ஒரு முதல்வராக இல்லாமல் தோனியின் ரசிகராக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன். எனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர்தான். தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர்'' என்று பெருமையுடன் ஸ்டாலின் பேசினார்.

தல தோனி பேச்சு

தல தோனி பேச்சு

மேலும், ஜெய்ஷா, கபிதேவ் ஆகியோரும் தோனியை பாராட்டி பேசினார்கள். இதனை தொடர்ந்து பேசிய தோனி கூறியதாவது:- சென்னை மிகச்சிறந்த நினைவுகளை எனக்கு தந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்.லில் சென்னை அணியில் இடம் கிடைக்கும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. சி.எஸ்.கே போட்டி எங்கு நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த ஒற்றை வார்த்தை

இந்த ஒற்றை வார்த்தை

சென்னை ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான புரிதல் அதிகம் இருக்கிறது. சென்னை அணியின் ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது பலதரப்பிலும் விரிவடைய வேண்டும். சென்னையில்தான் எனது கடைசி ஐ.பி.எல் போட்டி இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி. அடுத்த 5 ஆண்டுகளாக இருந்தாலும் சரி'' என்று தோனி பேசினார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

தல தோனி அடுத்த ஆண்டு சி.எஸ்.கே.வுக்காக விளையாடுவாரா? என்று பலவேறு தரப்பிலும் கேள்வி எழுந்து வந்தது. ஐ.பி.எல் தொடர் முடிவடைந்தவுடன் இந்த விவாதம் அதிகம் எழுந்தது. இந்த நிலையில் ''எனது கடைசி டி20 போட்டி சென்னையில்தான் இருக்கும்'' என்று சென்னையிலேயே தோனி கூறிய நிலையில் தோனி அடுத்த ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.வுக்கு விளையாடுவது உறுதியாகி விட்டது. இதனால் சென்னை ரசிகிர்கள் உற்சாகத்தில் மிதந்துள்ளனர். தோனியின் பேச்சை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+