துபாயில் ஜென்டர் டெஸ்ட்! குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான்! சுகாதாரத் துறை நோட்டீஸ்?
சென்னை: மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்ததாக யூடியூபர் இர்பானிடம் விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னர் அது ஆணா, பெண்ணா என்ற விவரத்தை வெளியிடுவது சட்டவிரோதம். இது போன்ற அறிவிப்பை எந்த வகையிலும் மருத்துவரோ, ஸ்கேன் செய்யும் டாக்டர்களோ, அறிவிக்கக் கூடாது என்பதுதான் சட்டம்.

இவ்வாறு அறிவித்தால் டாக்டர், குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு மகப்பேறு மருத்துவமனைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் யூடியூபர் இர்பான், தனது மனைவியின் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வெளிநாட்டில் சோதனை செய்து அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இர்ஃபான்ஸ் வியூ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் உணவகங்களில் உணவுகளை ரிவ்யூ செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இர்பான், ஆலியா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து நிறைய வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடுவர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்த நிலையில்தான் இர்பான் தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்திருக்கிறார். அந்த பார்ட்டியில் இர்பான் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்றார், ஆலியா தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்றார். பின்னர் இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் இர்பான் வென்றார்.
இதைத் தொடர்ந்து குழந்தையின் பாலினத்தை மருத்துவ அறிக்கையுடன் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், இந்தியாவில் பாலினம் கண்டறிதல் தடை செய்யப்பட்ட நிலையில் இர்பான் மட்டும் எப்படி கண்டறிந்தார் என்ற கேள்வியுடன் இருந்தனர். பிறகுதான் அவர் துபாயில் தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் செய்து அறிவித்திருந்தார் என்பது தெரியவந்தது.

இதற்கான பதிவை இன்ஸ்டாவிலும் அவர் போஸ்ட் செய்திருந்தார். ஸ்கேனில் குழந்தையை பார்த்துவிட்டு குழந்தையின் மூக்கு யாரை போல் உள்ளது என்பதையெல்லாம் இர்பான் தெரிவித்தார். இதன் பிறகுதான் அந்த மருத்துவ அறிக்கையை பார்ட்டியில் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில் இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications