"ப்ரியமுடன் ப்ரியா".. லாட்ஜ் ரூமில் விநோத ஒப்பாரி.. தலைகாணியால் அமுக்கி அமுக்கியே.. மேடம் இப்ப ஜெயிலில்
மதுஅருந்திய இளைஞர் திடீரென லாட்ஜ் ரூமில் சரிந்து விழுந்து இறந்ததில் குற்றவாளி கைதாகி உள்ளார்
சென்னை: லாட்ஜ் ரூமுக்குள் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் இளைஞர்.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மொத்த விஷயமும் அம்பலமாகி உள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்.. 41 வயதாகிறது.. இவர் அந்த பகுதியிலேயே ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. இவர் பிரியா என்ற பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார்.
பிரியாவுக்கு 42 வயதாகிறது.. கொசப்பேட்டை சின்னதம்பி தெருவை சேர்ந்தவராம் பிரியா.. சில வருடங்களாகவே இவர்களுக்குள் இந்த கள்ள உறவு நீடித்து வந்ததாக தெரிகிறது.

ஓ பிரியா
இந்நிலையில், பெரியமேடு ஆர்எம் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் 2 பேரும் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. அப்போது, ரூமுக்குள் பிரகாஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.. இதனால் பதறிப்போன பிரியா, லாட்ஜ் ஓனர் கபீருக்கு தகவல் தந்தார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கபீர், அந்த ரூமுக்குள் சென்று பார்த்தார்.. ஆனால், அதற்குள் பிரகாஷ் இறந்துவிட்டார்.. எனவே, பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. போலீசாரும், ரூமுக்குள் நுழைந்து, பிரகாஷ் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன் தி ஸ்பாட்
பிறகு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. முதல் விசாரணையே பிரியாதான்.. அன்றைய தினம் இரவு, ரூமுக்குள் செல்லும்போதே மதுபாட்டில்கள் வாங்கி சென்றார்களாம்.. பிறகு 2 பேருமே சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. அப்போது போதையில் தகராறு வெடித்துள்ளது.. இதில் உச்சக்கட்ட போதையில் இருந்த பிரியா, ஆத்திரத்தில் பிரகாஷை கடுமையாக தாக்கினாராம்.. அந்த தாக்குதலில் படுகாயமடைந்த பிரகாஷ், மயங்கி கீழே விழுந்துள்ளார்.. அப்படியே ஆன்தி ஸ்பாட்டிலேயே உயிரும் போயுள்ளது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து போலீசார் பிரியாவை கைது செய்துள்ளனர்.

லாட்ஜ் ரூம்
பிரகாஷூக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்.. ஆனால், பிரியாவுக்கு 23 வருடங்களுக்கு முன்பு பெருமாள் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.. 2 மகன்களும் இருக்கிறார்கள்.. ஆனால், கணவருடன் தகராறு செய்துகொண்டு, பிரியா அவரை விட்டு வந்துவிட்டாராம்.. மகன்களையும் பிரிந்துவந்துவிட்டார்.. பல வருடங்களாகவே தனியாகவே வசித்து வந்துள்ளார்.. ஓட்டேரியில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றிருக்கிறார் பிரியா.. அங்கேதான் பிரகாஷை சந்தித்துள்ளார்.. அந்த பழக்கமே இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவத்தன்று லாட்ஜ் ரூமிலேயே 2 பேரும் சேர்ந்து மது அருந்தியதுடன், ஒன்றாக சாப்பிட்டும் உள்ளனர்.

காதை கிழித்த கதறல்
அதற்கு பிறகுதான் தகராறு வெடித்துள்ளது. இரவு 9.30-க்கு லாட்ஜ் மேனேருக்கு பிரியா போன் செய்தாராம்.. அப்போதுகூட, என்னுடன் வந்த பிரகாஷ் அதிகளவில் மது குடித்துவிட்டார்.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், நிறைய குடித்ததால், மயங்கி கீழே விழுந்துவிட்டார் என்று சொல்லி கதறி கதறி அழுதுள்ளார்.. அதற்கு பிறகுதான், போலீசார் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர்.. சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து பிரியாவிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிட்டதாம்.. அதில் பிரகாஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் சுயநினைவின்றி உயிரிழந்தது தெரியவந்தது.

தலைகாணிகள்
அதற்கு பிறகுதான், சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து பிரியாவை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. பிரகாஷூடன் கள்ளக்காதலில் இருந்த பிரியாவுக்கு, வேறு ஒருவருடனும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.. இந்த விஷயம் பிரகாஷூக்கு தெரிந்து, அது சம்பந்தமாக கேட்டிருக்கிறார்.. இதில்தான் அன்றைய தினம் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரகாஷின் சட்டையை பிடித்து இழுத்து, அங்கிருந்த சுவரில் இடித்து தள்ளினாராம் பிரியா.. அத்துடன், தலையணையால் பிரகாஷ் முகத்தை பலமுறை அமுத்தி அமுத்தியே கொலையும் செய்திருக்கிறார்.. இவ்வளவையும் போலீசாரிடம் பிரியா வாக்குமூலமாக தந்ததையடுத்து, இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..!!!

துண்டிப்பு
இதனிடையே வேறு சில தகவல்களும் வெளியாகி உள்ளது.. பிரியாவும், பிரகாஷூம், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறார்கள்.. அந்த கம்பெனியில் வேலை பார்த்தபோதுதான், பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.. இதற்கு பிறகு, 2 பேருமே தொடர்பை துண்டித்து கொண்டுவிட்டார்களாம்.. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, மறுபடியும் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.. அப்போதுதான், இன்னொரு கள்ளக்காதலன் தொடர்பாக பிரியாவிடம் கேட்டுள்ளார் பிரகாஷ்..

வேலிதாண்டிய ஆடு
தனிமையில் பிரியா வாழ்ந்து வருவதால், தனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால், ஒன்றாக திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று சொன்னாராம் பிரகாஷ்.. இதற்கு பிரியா மறுத்துள்ளார்.. இதனால் ஏற்பட்ட தகராறில்தான், ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர்.. கைகளாலேயே அடித்து கொண்டிருக்கிறார்கள்.. ஒருகட்டத்தில் ஆவேசமாக பிடித்து பிரகாஷை கீழே தள்ளிவிடவும், தலை சுவரில் மோதி விழுந்து அடிபட்டுள்ளது.. அதற்கு பிறகும் ஆத்திரம் தீராமல் தலைகாணியை வைத்து, பிரகாஷின் முகத்தை அமுக்கியே கொன்றுள்ளதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications