மக்கள் யாருக்கும் விருப்பமில்லை...வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் - விளாசிய பிரேமலதா
ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயக தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதே காரணம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை: ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயக தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதே காரணம் என்று தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஓட்டுக்கு காசு கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சென்னை போன்ற பெரிய மாநகராட்சிகளில் வாக்குப்பதிவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மந்தமான நிலையில் வாக்குகள் பதிவாகி வருகின்றன. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. குறைவான அளவு வாக்காளர்களே வந்து வாக்களித்து வருகின்றனர்.

பிரேமலதா வாக்களித்தார்
இதற்கான காரணம் என்ன என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார். அவருடைய மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோரும் வாக்களித்தனர்.

நம்பிக்கை இல்லை
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது தெரியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயக தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதே காரணம். ஓட்டுக்கு காசு கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர்.

வெறுப்பின் உச்சம்
இதனால் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனவேதனை மற்றும் வெறுப்பின் உச்சம்தான் இன்று யாருமே வாக்களிக்க வரவில்லை. நான் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடம் ஒரு வெறுப்பை பார்க்க முடிந்தது என்று கூறினார்.

வாக்களிக்கப் பணம்
மக்கள் யாருக்கும் விருப்பமில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தால், வாக்களிக்க பணம் கொடுக்கிறார்கள், கொடுக்கின்ற எந்த வாக்குறுதியும் நிறைவேற்றுவது இல்லை. இதுக்கு எதற்கு வாக்காளிக்க செல்ல வேண்டும் என்ற வெறுப்பின் உச்சத்தை என்னால் பார்க்க முடிந்தது என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications