திமுக தந்த தேர்தல் வாக்குறுதிகள்.. நிஜத்தில் சாத்தியமே இல்லையா? புள்ளி விவரம் சொல்வது என்ன?
சென்னை 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளுக்கே இன்னும் 'விடிவு' கிடைக்கவில்லை; அதற்குள் அடுத்த 'மெகா' பிளானுடன் கிளம்பிவிட்டது அறிவாலயம். இது மக்கள் நலனுக்கான திட்டமா அல்லது அடுத்த ஊழலுக்கான அடித்தளமா?
"சொன்னதைச் செய்வோம்... செய்வதைச் சொல்வோம்..." - இதுதான் தி.மு.க-வின் தினசரி முழக்கம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்த்தால், "சொன்னதைச் செய்யவில்லை... செய்யாததைச் சொல்கிறோம்" என்பதே நிதர்சனமாக இருக்கிறது. 2021 தேர்தலின் போது வானளாவிய வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்த தி.மு.க, இப்போது 2026 தேர்தலுக்காகப் புதிய தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது. 70%, 80%, ஏன் 100% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தலைமை மார்தட்டிக் கொள்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறாக இருக்கிறது.

மாணவர்களை ஏமாற்றிய 'டேப்' அரசியல்!
கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று நம்பி வாக்களித்த தமிழக இளைஞர்களை தி.மு.க தந்திரமாக ஏமாற்றிவிட்டது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 'டேப்' (Tabs) வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், இன்று வரை பலமுறை கோரிக்கை விடுத்தும் மாணவர்களுக்கு அந்த டேப் போய்ச் சேரவில்லை. இது மாணவர் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம்.
விவசாயிகளின் கண்ணீர்: வெறும் காகிதத்தில்தான் 'பாதுகாப்பு'!
விவசாயிகளை வஞ்சிப்பதில் தி.மு.க அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன:
நெல் மற்றும் கரும்பு விலை: டெல்டா பகுதிகளில் ஓட்டு வாங்குவதற்காக நெல்லுக்கு ₹2,500-ம், கரும்புக்கு ₹4,000-ம் ஆதார விலை தருவதாகக் கூறினார்கள். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள்.
சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை: கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளிடமிருந்து விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
நில ஒருங்கிணைப்புச் சட்டம்: விவசாய நிலங்களைப் பாதுகாப்போம் என்று கூறிவிட்டு, 100 ஏக்கருக்கு மேல் உள்ள திட்டங்களை 'சிறப்புத் திட்டங்களாக' மாற்றி விவசாயிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023'-ஐ நிறைவேற்றியுள்ளது இந்த அரசு.
கிடங்குகள் மற்றும் ஆராய்ச்சி: ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தானியக் கிடங்கு, ஒவ்வொரு வார்டிலும் மண் ஆராய்ச்சி நிலையம் எனச் சொன்னதெல்லாம் வெறும் பேச்சளவிலேயே நின்றுவிட்டன. இதன் விளைவாகத் தானியங்கள் வீணாகி விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பெண்களை வெறும் 'வாக்கு வங்கியாக' பார்க்கும் அரசு!
பெண்களுக்கு 25% மானியத்துடன் கூடிய கடன், ஏழைப் பெண்களுக்கு ₹50,000 வட்டியற்ற சிறுதொழில் கடன் எனச் சொன்ன எதையும் தி.மு.க செய்யவில்லை. 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை, பாலியல் குற்றங்களுக்குத் தனி நீதிமன்றம் போன்ற வாக்குறுதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களின் ஏமாற்றம்: OPS ஒரு கானல் நீர்!
ஓய்வூதியம்: 70 மற்றும் 80 வயது கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 10% மற்றும் 20% உயர்வு வழங்கப்படவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS): தேர்தல் நேரத்தில் OPS கொண்டு வரப்படும் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அதை அமல்படுத்த முடியாது என்று முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் வெளிப்படையாகக் கைவிரித்தார்.
அங்கன்வாடி மற்றும் தூய்மைப் பணியாளர்கள்: 72 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை, கூடுதல் ஊதியம் என அனைத்தும் வெற்றுச் சொல்லாகிவிட்டன.
நிர்வாகச் சீர்கேடும் 'ஆவின்' அவலமும்!
மின் கட்டண உயர்வு: 3 ஃபேஸ் மின் கட்டணத்தில் ₹50 ரத்து செய்யப்படும் என்றார்கள். ஆனால், புதிய இணைப்பிற்கான கட்டணத்தை ₹6,650-லிருந்து ₹9,600 ஆக உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்கள்.
ஆவின் குளறுபடிகள்: பால் விலை நிர்ணயத்திற்குத் தனி ஆணையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டது. முறையான தொழில்நுட்ப மேம்பாடு இல்லாததால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பூச்சிகள் கண்டெடுக்கப்படும் அவலம் தொடர்கிறது.
லோக்ஆயுக்தா: ஊழலை ஒழிக்க லோக்ஆயுக்தா புத்துயிர் பெறும் என்றார்கள். ஆனால், வாரிசு அரசியலும் ஊழலும் தங்குதடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக அதைச் செயல்படுத்தவில்லை என்ற விமர்சனம் வலுவாக உள்ளது.
2026: ₹8,000 கூப்பன் - ஒரு மெகா ஸ்கேமுக்கான தொடக்கமா?
இப்போது 2026 தேர்தலுக்காக ₹8,000 கூப்பன் வழங்கப்படும் என்ற புதிய வாக்குறுதியை முன்வைக்கிறார்கள். பழைய வாக்குறுதிகளையே நிறைவேற்றாதவர்கள், இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவார்கள்? இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் அச்சப்படுகிறார்கள்.
தி.மு.க-வின் நிர்வாகத் திறமையின்மையால் 'தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம்' போன்ற கலாச்சார அமைப்புகளே மத்திய அரசின் உதவியை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் ஒரு கவர்ச்சிகரமான 'கண்ணுக்கினிய' பொய்மூட்டை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!
-
ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிப்பு.. மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறிய ஆலங்குளம் தொகுதி -
அங்க மூணாவதா ஒருத்தன் இருப்பானே.. தம்பி மூலம் செந்தில் பாலாஜி செக்..விஜய பாஸ்கருக்கு ஷாக் -
7+1 ராஜ்ய சபா சீட் தரேன்னு ஸ்டாலின் சொன்னாரு.. நான் என்ன சொன்னேன் தெரியுமா? திருமாவளவன் விளக்கம் -
தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது? -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை.. அடுத்த ஐந்து நிமிடத்தில் ட்விஸ்ட் -
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங்











Click it and Unblock the Notifications