திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.. நிர்வாகிகளின் கருத்து கட்சி கருத்தாகாது.. கே.சி வேணுகோபால் அதிரடி
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. கூட்டணி குறித்து இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்றும் கே.சி வேணுகோபால் கூறியுள்ளார் [DMK Congress Alliance].
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 75 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி வேணுகோபால், "திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் தொடர்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறேன். வகுப்புவாத சக்திகளை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். திமுக - காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக எங்கள் பழைய கூட்டாளி.
அவர்களுடன் எங்கள் நிலைப்பாட்டை எடுத்து சொல்வோம். பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்களும் ஒரு அரசியல் கட்சி. எங்களுக்கும் அரசியல் லட்சியங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் வேறுபட்டு கருத்துகள் வரலாம். கூட்டணி குறித்து நிர்வாகிகள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து.
அவர்களின் தனிப்பட்ட கருத்து
இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து இல்லை.அவர்களின் குரல் எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியின் கருத்தாகாது. காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி குறித்து கொள்கை, பார்வை உள்ளது. இறுதி முடிவை காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும். கூட்டணி ஆட்சி மற்றும் ஆட்சியில் பங்கு ஆகியவை குறித்து தெளிவான பேச்சுவார்த்தை வேண்டும்.
கூட்டணி தொடர்பாக ஆதரவாகவோ அல்லது எதிராகவே பொது வெளியில் பேசக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். கூட்டணி குறித்து எங்கள் அகில இந்திய தலைவர், ராகுல் காந்தி முடிவு எடுப்பார்கள். அதை உங்களுக்கு அதிகாரபூர்வமாக தெரியப்படுத்துவோம்" என்றார். தவெகவுடன் கூட்டணி ஏற்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு," உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது" என்று கூறினார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications