துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது.. டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்- மருத்துவமனை அறிக்கை
சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video

நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்து வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு திமுகவில் உள்ள பெரிய தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன் உடல்நிலை குறித்து, பல்வேறு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. இவ்வாறு ரேலா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications