கூட்டணி கட்சிகளுக்கு ஜெர்க்.. 21 மேயர் பதவிகளையும் மொத்தமாக அள்ளும் திமுக?
சென்னை: 21 மேயர் பதவியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் திமுகவே மொத்தமாக அள்ளி செல்கிறது. இதனால் கூட்டணி கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றன.
நகர்ப்புற தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சியே வென்றது.
இந்த தேர்தலில் வென்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். நாளை மறுதினம் அதாவது 4- ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

துணை மேயர்
மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். காலையில்மேயர் ,நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தலும் மாலையில் துணை மேயர், துணை நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது.

கூட்டணி கட்சிகள்
கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமு, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களுக்கு மேயர் பதவி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என கேட்கின்றன. கன்னியாகுமரி, சிவகாட்சி ஆகிய மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு காய் நகர்த்தி வருகிறது.

21 மேயர் பதவிகள்
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளிடம் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் 21 மேயர் பதவிகளை திமுகவே எடுத்துக் கொள்ளும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க இயலாது என்றும் தெரிவித்துவிட்டதாம். வேண்டுமானால் நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் ஒதுக்க முயற்சிக்கிறோம் என திமுக தலைமை சொல்லிவிட்டது.

திமுக தலைமை
இதனால் திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மறைமுகத் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியும் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவிகளை ஒதுக்க திமுக மறுப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications