ஜெயலலிதா சப்ஜெக்ட்டை எடுத்ததே மிகப்பெரிய அநாகரீகம்.. நிர்மலா சீதாராமன் மீது திமுக எம்எல்ஏ தாக்கு
சென்னை: சேலையை சட்டமன்றத்தில் இழுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டை நிர்மலா சீதாராமன் பேசுவது சிறுபிள்ளைத்தனம் என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் விமர்சித்துள்ளார்..
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில் தமிழர்கள் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடம் பற்றி எல்லாம் குறிப்பிடப்படவில்லை என கருத்து சொல்லியிருக்குறாங்க..

அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் சேலை இழுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது.. என்பது மாதிரியான கருத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு விஷயங்கள் குறித்து பிரபல செய்தி ஊடகம் குறித்து எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ பரந்தாமன் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், " மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற, இந்திய நாடே வெட்கப்படக்கூடிய மிகப்பெரிய மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதை பற்றி மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மணிப்பூர் சென்று பார்வையிட்டு வந்த பின்னர், பிரதமர் மோடியின் மீது, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசினார்கள்.
அப்போது மத்திய அரசு எங்கெல்லாம் தவறு செய்கிறது.. ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.. மொழி திணிப்பால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏதேச்சதிகாரம், ஒரே நாடு ஒரே மொழி இது மாதிரி எல்லாம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக செய்து கொண்டு வருகிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழி பேசினார்.
அப்போது அவர் நீங்க இந்தி மொழியை திணிக்கிறீர்கள்.. இந்தியாவின் பிற மொழிகளையும் பாருங்க என்பது தான் கனிமொழி பேச்சின் அர்த்தமாக இருந்தது. தமிழில் உள்ள இலக்கியத்தை படிங்க.. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தை பாருங்கள் என்று மேற்கோள் தான் காட்டினார்.
ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது , மணிப்பூர் சம்பவத்தை பற்றி மருத்துக்குக் கூட பேசவில்லை. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பேசவில்லை.. அதைவிட்டுவிட்டு அரசியல் மேடை போல் அவையை மாற்றி உள்ளது பாஜக அரசாங்கம்..
வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியும் தெற்கிலும், கிழக்கிலும் கடலும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தது என்று பாடப்புத்தகத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் மாபொசியின் விளக்கத்தை சொன்னார்கள் .. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு எல்லைகள் மாறி உள்ளது.
ஆனால் சிலப்பதிகாரத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று கற்பனையான ஆதாரமற்ற விஷயத்தை எழுதி கொடுத்ததை நிர்மலா சீதாராமன் படித்துள்ளார். இந்தியா என்ற சப்ஜெக்ட் எல்லாம் சிலப்பதிகாரம் காலக்கட்டத்தில் இல்லை.. பல சமஸ்தானங்கள் இருந்தது. வெள்ளையர்கள் வசதிக்காக இந்தியா என்று நிர்வாக ரீதியாக உருவாக்கப்பட்டது. நிர்மலா சீதராமன் புரிதல் இல்லாமல் பட்ஜெட். வரி உள்பட பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் என்று பார்த்தால், வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்.
இரண்டாவது ஜெயலலிதா சப்ஜெக்ட்டை எடுத்ததே மிகப்பெரிய அநாகரீகம்.. சாதாரண சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. பெண்கள் வல்லுறவுக்கு ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் வெளிப்படையாக மானபங்கம் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாமல் , நிர்மலா சீதாராமன், அரசியல் நாடகம் செய்த ஜெயலலிதாவின் செயலை, அதாவது ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டை போய் பேசுவது,இவர்களின் சிறு புத்தி மற்றும் சிறுபிள்ளைத்தனமாகும். ஒன்றுமே இல்லை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்ததாக பாஜக எம்பிக்கள் கூறினார்கள் அவர்களிடம் எப்படி தரமான வாதத்தை பார்க்க முடியும்" என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கூறினார்.
-
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து!












Click it and Unblock the Notifications