நிலைக்குழு தலைவர் பதவியை தட்டிய கனிமொழி.. காரணம் ‘ஸ்ரீவெங்கடேசபுரம்’.. முதல்வரை சந்தித்து வாழ்த்து!
சென்னை : திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலினை சந்தித்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி வாழ்த்துப் பெற்றார்.

பஞ்சாயத்து ராஜ் திட்டம்
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அசத்திய கனிமொழி
இந்த திட்டத்தின் கீழ் கிராமத்தை தத்தெடுத்து வெற்றிகரமாக பணிகளை செய்த வெகுசில எம்.பிக்களில் கனிமொழியும் ஒருவர். ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி எம்.பி, அங்கு குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடங்கி விவசாய குளம் வரை ரூ.2 கோடி செலவில் சீரமைத்துக் கொடுத்தார். தமிழகத்தில் இருந்து முதல் எம்.பியாக இவரே கிராமத்தை தத்தெடுத்து 'சன்சத் கிராம் ஆதர்ஷ் யோஜனா' திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தினார். இது பலராலும் பாராட்டப்பட்டது.

நிலைக்குழு உறுப்பினர்கள் நியமனம்
இந்நிலையில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 21 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

தலைவராக கனிமொழி
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பியுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தலைமையில் 31 எம்.பிக்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஸ்ரீ வெங்கடேசபுரம் கிராமத்தை தத்தெடுத்து சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாகவே இந்த தலைவர் பதவி கனிமொழிக்குக் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினை சந்தித்த கனிமொழி
இந்நிலையில், இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் கனிமொழி. நாடாளுமன்றத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி.

நிலைக்குழு
மக்களவையில் 24 மற்றும் மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களைக் கொண்ட திமுகவுக்கு நிலைக்குழுக்களில் இரண்டு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா தொழில்துறை குழுவிற்கும், லோக்சபா எம்.பி கனிமொழி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவிற்கும் தலைமை வகிக்க உள்ளனர்.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications