"அநாகரீகம்".. அண்ணாமலை பாதயாத்திரையில் நடந்த "சம்பவம்".. பாய்ந்து வந்த திமுக.. கவனிச்சீங்களா!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையில் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக அதன் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இவர் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். அண்ணாமலை நடைபயணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முக்கியமாக இந்த நடைபயணம் தொடர்பாக தினசரி அப்டேட்களை உளவுத்துறை மாநில அரசுக்கு அனுப்பி வருகிறதாம். மத்திய அரசின் உளவுத்துறையும் இந்த நடைப்பயணத்தை கவனித்து வருகிறதாம்.
அதாவது நடைபயணத்தால் பயன் இருக்கிறதா? மக்கள் இதை எப்படி பார்க்கிறார்கள்? நடைப்பயணத்தை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? பாஜகவிற்கு இதனால் ஆதரவு கிடைக்கிறதா? என்று தினசரி ரிப்போர்ட்டை மத்திய, மாநில உளவுத்துறை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
பாரத் ஜோடோ யாத்திரை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பாணியில் யாத்திரை மேற்கொள்ள அண்ணாமலை இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். சாலைகளில் தினமும் மக்களை சந்தித்து பேசும் திட்டத்தில் அண்ணாமலை இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்கிறார்
ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு: இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரையில் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அதன்படி இராமநாதபுரத்தில் பாதயாத்திரை என்கிற பெயரில் குடித்து விட்டு கூட்டத்தில்
பெண் ஊடகவியலாளர்களிடன் அத்துமீறி அநாகரிகமாக மிகவும் கீழ்த்தரமாக நடந்து உள்ளனர் இந்த காட்டுமிராண்டி பாஜகவினர், என்று ராஜீவ் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நடக்கிறார்: இன்னொரு பக்கம் அண்ணாமலை இந்த நடைப்பயணத்தில் பெரிதாக நடக்கவில்லை. அவர் பெரும்பாலும் கேரவனில்தான் செல்கிறார் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறதாம்.
அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது.
பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும். நவீன கழிப்பறை, குளியலறை என்று பொதுவாக கேரவனில் இருக்கும் வசதிகள் எல்லாம் இதில் உள்ளன. இந்தநிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தில் அவர் பெரிதாக நடக்காமல், காரிலேயே பயணம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த கேரவனில்தான் அண்ணாமலை அதிகமாக பயணம் செய்வதாக கூறப்படுகிறது.
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications