ஆடு நனைகிறது என்று...சீமான் மீது மாஜி தம்பி ராஜீவ் காந்தி அட்டாக்- ஸ்டாலின் படம் அவமதிப்பு விவகாரம்!
சென்னை: கர்நாடகாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் அவமதிப்பு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை முன்வைத்து இழிவான செயல்களில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய அருவறுப்பான செயல்களுக்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மு.க.ஸ்டாலின் தனிநபர் அல்ல. 8 கோடி தமிழ் மக்களின் முதலமைச்சர். அவரது உருவப்படத்தை அவமதிப்பது என்பது தமிழர் இனத்தை அவமதிப்பது. தமிழ்ப் பேரினத்துக்கு நிகழ்த்தப்படுகிற பெரும் அவமானம். முதல்வர் ஸ்டாலின் உருவப் படம் அவமதிக்கப்படுகிற போது என் நெஞ்சு வலிக்கிறது. ஆனால் திமுகவினர் ஏன் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதற்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி (நாம் தமிழர் கட்சியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்தவர்) கண்டனம் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுவதை போல் பாஜக மதவெறி கும்பலும்.. கரம்,சிரம்,புறம் உயர்த்தும் வாய் உதார் கோஷ்டியும்.... நம் முதலமைச்சரை கர்நாடகாவில் அவமானபடுத்துகிறார்கள் என கத்துகிறது!!!!

என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறது அக் கும்பல் ?? தங்களைப்போல் கர்நாடாகவில் வயிற்று பிழைப்பு அரசியல் செய்யும் கன்னட மொழி வெறியன் வாட்டாள் நாகராஜ் போல் இங்குள்ள தமிழர்கள் ஆக வேண்டும் என்கிறார்களா?

சீமான் போல் உள்ள வாட்டாள் நாகராஜ்கள் கோபப்பட காரணமே காவேரி நீர் உரிமை விசயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாடும் சட்ட போராட்டமும் தான்!!. இவ்வாறு தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஜீவ் காந்தி.












Click it and Unblock the Notifications