கச்சத்தீவு திருவிழா- இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசியது டி.ஆர்.பாலு எம்.பி!
சென்னை: கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். முன்னதாக டக்ளஸ் தேவானந்தா தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியது மூத்த திமுக தலைவர் என்று மட்டும் பூடகமாக கூறியிருந்தார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இது சீனிகுப்பன் படையாச்சி என்ற தமிழக மீனவரால் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறும்.

அனுமதி மறுப்பு
இத்திருவிழாவில் ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பர். இருநாட்டு தமிழர்களின் உறவையும் வலுப்படுத்தும் வகையில் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவித்தது இலங்கை அரசு. இது தமிழக பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். மேலும் இக்கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேரில் கொடுத்தார். அப்போது இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இது குறித்து பேசுவதாகவும் ஜெய்சங்கர் உறுதி அளித்திருந்தார்.

டக்ளஸ் போட்ட புதிர்
இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு செய்தியை கொடுத்திருந்தார். அதில், திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக தம்மிடம் பேசியதாகவும் அப்போது கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்ததாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். ஆனால் தம்மிடம் பேசியது யார் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடாததால் இச்செய்தியின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்தது. இதனை நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் செய்தியாகவும் வெளியிட்டது.

டக்ளஸுடன் பேசியது டி.ஆர்.பாலு
தற்போது திமுக ஆதரவு ஊடகமான சன் நியூஸில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தாமே பேசியதாகவும் கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத் தமிழர்களை அனுமதிக்க கோரியதாகவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கொடுத்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம் பேசியதாவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications