விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேறு வேலைகள் உள்ளது என முதல்வர் விஜய் சந்திப்பை உள்துறை அமைச்சகம் ரத்து செய்த நிலையில், குறிப்பிட்ட அதே நேரத்தில் கேரள முதலமைச்சர் வி.டி சதீசனை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் உடனான சந்திப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் அவரின் முதல் டெல்லி பயணம் நிறைவடைந்துள்ளது. நேற்று மாலை பிரதமர் மோடியை சுமார் 10 நிமிடங்கள் சந்தித்த முதல்வர் விஜய், 4 கோரிக்கைகளை அடங்கிய கடிதத்தை வழங்கினார். மீனவர்கள் கைது விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மேகதாட்டு அணை விவகாரம், வான்வழி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

Vijay

பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போதும் ஜிஎஸ்டி நிதி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகள் வைத்தார். இதன்பின் முதல்வர் விஜய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த சந்திப்பை புறக்கணித்திருப்பது தெரிய வந்துள்ளது.

வேறு வேலைகள் உள்ளது என்று உள்துறை அமைச்சகம் விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்தது. ஆனால் குறிப்பிட்ட அதே நேரத்தில் கேரள முதல்வர் விடி சதீசனை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் உடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு புறக்கணித்துள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இன்னொரு முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பும் நடக்கவில்லை. இதனால் டெல்லியில் இருந்து முதல்வர் விஜய் தமிழ்நாடு புறப்பட்டுள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்தி உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருந்தால், நேற்றிரவே விஜய்யால் சென்னை திரும்பி இருக்க முடியும்.

இன்று காலை வரை விஜய் காத்திருந்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் டெல்லியில் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார். இதுவரை டெல்லிக்கு சென்ற தமிழக முதல்வராக இருந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் திரும்பி வந்ததே இல்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்திக்காமல் புறப்பட தயாரான போது, அவரை மறுத்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பதன் மூலம் தேசிய அளவில் தமிழ்நாட்டின் குரலை பதிவு செய்ய முடியும். அப்படியான ஒரு பொன்னான வாய்ப்பை விஜய் வீணடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் விஜய்யின் டெல்லி பயணம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+