விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன?
டெல்லி: வேறு வேலைகள் உள்ளது என முதல்வர் விஜய் சந்திப்பை உள்துறை அமைச்சகம் ரத்து செய்த நிலையில், குறிப்பிட்ட அதே நேரத்தில் கேரள முதலமைச்சர் வி.டி சதீசனை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் உடனான சந்திப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் அவரின் முதல் டெல்லி பயணம் நிறைவடைந்துள்ளது. நேற்று மாலை பிரதமர் மோடியை சுமார் 10 நிமிடங்கள் சந்தித்த முதல்வர் விஜய், 4 கோரிக்கைகளை அடங்கிய கடிதத்தை வழங்கினார். மீனவர்கள் கைது விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மேகதாட்டு அணை விவகாரம், வான்வழி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போதும் ஜிஎஸ்டி நிதி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி தொடர்பான கோரிக்கைகள் வைத்தார். இதன்பின் முதல்வர் விஜய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த சந்திப்பை புறக்கணித்திருப்பது தெரிய வந்துள்ளது.
வேறு வேலைகள் உள்ளது என்று உள்துறை அமைச்சகம் விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்தது. ஆனால் குறிப்பிட்ட அதே நேரத்தில் கேரள முதல்வர் விடி சதீசனை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் விஜய் உடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு புறக்கணித்துள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இன்னொரு முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பும் நடக்கவில்லை. இதனால் டெல்லியில் இருந்து முதல்வர் விஜய் தமிழ்நாடு புறப்பட்டுள்ளார். சோனியா காந்தி, ராகுல் காந்தி உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருந்தால், நேற்றிரவே விஜய்யால் சென்னை திரும்பி இருக்க முடியும்.
இன்று காலை வரை விஜய் காத்திருந்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் டெல்லியில் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார். இதுவரை டெல்லிக்கு சென்ற தமிழக முதல்வராக இருந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் திரும்பி வந்ததே இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்திக்காமல் புறப்பட தயாரான போது, அவரை மறுத்து செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பதன் மூலம் தேசிய அளவில் தமிழ்நாட்டின் குரலை பதிவு செய்ய முடியும். அப்படியான ஒரு பொன்னான வாய்ப்பை விஜய் வீணடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் விஜய்யின் டெல்லி பயணம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications