"சீக்ரெட்".. ஒருத்தரையும் காணோமாம்.. கே.சி. வீரமணியிடம் ரெய்டு.. அதிமுகவினர் எங்கே போனார்கள்
கேசி வீரமணியிடம் ரெய்டு குறித்து ஜெயக்குமார் திமுகவை சாடியுள்ளார்
சென்னை: சென்னையில் 4 இடங்களில் ரெய்டு நடந்து வந்தாலும், கேசி வீரமணிக்கு ஆதரவு தெரிவிக்க அதிமுகவினர் யாருமே வரவில்லை.. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒருவரையும் சென்னையில் காணோமாம்.. என்ன காரணம்?
Recommended Video
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோதே, அடுத்தது யாருக்கு குறி என்ற கேள்வி எழுந்தது? இதையொட்டி 2 மாஜிக்களின் பெயர்களும் அடிபட்டன.
ஆனால், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க உள்ள நிலையில், எப்படியும் யார் மீதும் ரெய்டு நடவடிக்கை பாயாது என்றே யூகிக்கப்பட்டிருந்தது..

மாஜிக்கள்
அதன்படியே கூட்டத்தொடர் முடிந்த நிலையில், மாஜிக்கள் மீதான ரெய்டுகள் ஆரம்பமாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் வீரமணியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் குறி வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.. விடிகாலையிலேயே ரெய்டு ஆரம்பமாகிவிட்டது.. சென்னை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள கேசி வீரமணி உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..

அதிகாரிகள்
அதேபோல, சென்னை சாந்தோமில் உள்ள கேசி வீரமணி வீட்டிலும், அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுகிறது. வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள இவருடைய இல்லத்தில் சோதனை நடக்கிறது.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் வீரமணிக்கு சொந்தமான ஸ்டார் ஹோட்டலிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்...

அதிமுகவினர்
இப்போது இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், சென்னையில் மட்டும் 4 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.. ஆனால், அதிமுகவினர் யாரையுமே அங்கே காணோம்.. இதுவே, எஸ்.பி.வேலுமணியிடம் ரெய்டு நடந்தபோதே, மொத்த பேரும் திரண்டு கோவை வீட்டிற்கு படையெடுத்தனர்..

வேலுமணி
மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை வேலுமணிக்காக குரல் கொடுத்தனர்.. அதுவும் காலை 6 மணிக்கே தொண்டர்கள் குவிந்துவிட்டனர்.. இப்படி அனைவரையுமே திரட்டி வந்து ஆதரவு சொன்னதே வேலுமணிதானாம்.. இதற்கு காரணம், ரெய்டு நடக்க போகும் விஷயம், வேலுமணிக்கு முன்னமேயே தெரிந்திருந்ததுதான்.

ரெய்டு
அதனால்தானோ என்னவோ, இந்த முறை கேசி வீரமணியிடம் ரெய்டு நடத்துவதை அதிகாரிகள் கடைசிவரை கமுக்கமாகவே வைத்திருந்தனர்.. திடீரென்றுதான் ரெய்டு நடத்தியுள்ளனர்.. ஆனால், 6 மணிக்கு பிறகு ரெய்டு பற்றின செய்திகள் வெளிவந்தபிறகும்கூட, அதிமுகவினர் யாருமே வரவில்லை.. ரெய்டுக்கு எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.. குறைந்தபட்சம் வீரமணிக்கு ஆதரவுகூட தரவில்லை. எல்லாரும் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பதுதான் மிகப்பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.

திமுக
ஒருவேளை, வீரமணிக்கு ஆதரவு தந்தால் தாங்களும் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பதால் ஒதுங்கி உள்ளனரா? அல்லது யாரும் ஆதரவு தர செல்லக்கூடாது என்று மேலிடம் உத்தரவு ஏதேனும் பிறப்பித்துள்ளதா? அல்லது வீரமணிக்கான செல்வாக்கு கட்சிக்குள் குறைந்துவிட்டதா என்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த ரெய்டு விவகாரம் வீரமணிக்கு பெருமளவு சிக்கல்களை தருமா? திமுக கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளுமா? என்ற சந்தேகமும் உள்ளது... பார்ப்போம்..!
-
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா?












Click it and Unblock the Notifications