கொரோனா தடுப்பூசி போட்டால்.. 28 நாட்களுக்கு "இந்த விஷயம்" செய்யவே கூடாது.. விஜயபாஸ்கர் முக்கிய தகவல்
சென்னை: இந்தியாவில், வரும் 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மற்றும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Recommended Video

இரு தடுப்பூசிகளுமே இரு டோஸ்களை கொண்டதாகும். ஒரு டோஸ் போட்டால் மட்டும் கொரோனா வராது என மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. முதல் டோஸ் போட்ட பிறகும், வெளியிடங்களுக்கு அனாவசியமாக போகக் கூடாது.
தடுப்பூசியின் இரண்டு டோஸ் 28 நாட்கள் இடைவெளியில் எடுக்கப்பட வேண்டும்.

28 நாட்கள்
ஆன்டிபாடிகளின் பாதுகாப்பு பொதுவாக இரண்டாவது டோஸுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு உருவாகும். அமெரிக்காவில் போடப்படும் ஃபைசர் தடுப்பூசியும் கூட அப்படித்தான். 28 நாட்கள் இடைவெளியில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

மது அருந்தக் கூடாது
இந்த நிலையில்தான், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டியொன்றில், முக்கிய தகவல் ஒன்றைச் சொல்லியுள்ளார். திருச்சியிலிருந்து இதர மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய கரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பு வாகனங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று கூறினார்.

நோய் எதிர்ப்பு சக்தி
விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு, மது அருந்தக்கூடாது. அதாவது 2வது டோஸ் போடும் வரையில், அடுத்த 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. அப்படிச் செய்யும்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

தனிமை தேவையில்லை
தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். எனவே, முதல் டோஸ் போட்டுவிட்டோ, அல்லது குறுகிய காலத்திலோ, அநாவசியமாக வெளியே போகக்கூடாது. கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிவிடக் கூடாது. அதேநேரம், கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications