Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டபோது இந்திரா காந்தி எதிர்ப்பு தெரிவித்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் வந்த போது அமெரிக்கா அதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது அதற்கு இந்திரா காந்தி எதிர்ப்பு தெரிவித்தது எப்படி என்பதை பார்க்கலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து (தற்போதைய வங்கதேசம்) தனி நாடாக அறிவிக்க மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 1971 ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி நடந்த இந்த போராட்டத்தின் போது ஆயுதம் இல்லாத கிழக்கு பாகிஸ்தான் மக்களை (தற்போதைய வங்கதேசத்தவர்கள்) பாகிஸ்தான் நாட்டு ராணுவம் படுகொலை செய்தது.

pakistan indira gandhi india

இதனால் லட்சக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அப்போது கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. கடந்த 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்திய வான்படை மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சுமார் 13 நாட்கள் நீடித்த இந்த விடுதலைப் போர் மிகவும் குறுகிய காலம் நடைபெற்றிருந்தாலும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

அந்த நாளில் கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசத்தில்) இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் எந்தவித நிபந்தனையுமின்றி சரணடைந்தனர். இதையடுத்து கிழக்கு பாகிஸ்தான் Bangladesh (வங்கதேசம்) என பெயரிடப்பட்டு அதன் தலைநகர் டாக்கா என்பதையும் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றது என்பதையும் இந்திய நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.

வங்கதேசம் என்ற தனி நாடு பிரிவதை அமெரிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போரின்போது அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிஞரும் இந்தியாவை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சீனாவை இந்திய எல்லைக்கு அருகில் தங்கள் படைகளை நகர்த்துமாறு தெரிவித்தனர். இதற்காக டிசம்பர் 10ஆம் தேதி நிக்சனும் கிஸ்ஸிஞரும் சீனா பிரதிநிதி ஹுவாங் ஹுவாவை சந்தித்து பேசியிருந்தனர்.

அமெரிக்காவின் இந்த முயற்சிகளை எல்லாம் இந்திரா காந்தி புரிந்து கொண்டு இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார். இதனால் அமெரிக்காவின் முயற்சிகள் எதுவும் இந்தியாவில் எடுபடவில்லை. இது போன்று இரு நாடுகளுக்கு இடையே போரில் மூன்றாவது நாடான அமெரிக்க தலையிட்ட போது இந்திரா காந்தி என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.

அதிலும் அமெரிக்காவிலேயே அவர் பேசுகையில், ஒரு நாடு எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை கூறுவதற்கு வேறு எந்த நாட்டிற்கு உரிமை இல்லை, அது போல் கூறுவதும் அந்த நாட்டின் பணியும் இல்லை. அது உதவுவதற்கான விஷயமாகவே இருந்தாலும் மூன்றாவது நாடு தலையிட கூடாது. என் நாட்டிற்கும் எனது அண்டை நாட்டிற்கும் நிலவும் சூழல் குறித்து நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். அது என் கடமை.

அதை பொருத்து அவர்களும் தங்கள் கருத்துகளை என்னிடம் சொல்வார்கள். அதை எப்படி புரிந்து கொள்வது , அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்களே முடிவெடுத்துக் கொள்வோம் என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்திராவை இரும்பு பெண்மணி என புகழ்ந்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+