ஆயுஷ்மான் சுகாதார கார்டு.. இது இருந்தா போதும் ஏழைகளுக்கு கிடைக்கும் ரூ 5 லட்சம் வரை சிகிச்சை
சென்னை: ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பதன் மூலம் ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். இந்த கார்டை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் சிறந்த சுகாதார வசதிகளைப் பெற வேண்டும் என்பதற்காக பாஜக அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா எனும் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவை தொடங்கியுள்ளது.

இது உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் இலவச சிகிச்சையை பெறுகிறார்கள். மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன் அதன் தகுதி பற்றிய தகவல்களைப் பெறுவது அவசியம். ஏழை மற்றும் நலிவடைந்த வருவாய் பிரிவினருக்காக இந்த திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
பழங்குடியினர், வீடற்றோர், ஆதரவற்றோர் , கூலித் தொழிலாளி போன்றோர் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். உங்கள் தகுதியைச் சரிபார்க்க விரும்பினால் PMJAY எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடலாம். அதில் Am I Eligible என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் செல்போன் எண், ரேஷன் கார்டு எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். இதற்கு பிறகு, சில நிமிடங்களில் உங்கள் தகுதியை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கூட ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 15 நாட்களுக்கான செலவையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த திட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வயது மற்றும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு திட்டத்தின் பலனை பெறலாம். இந்த திட்டத்திற்கு ரூ 1 கூட செலுத்த தேவையில்லை.
இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்- ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், ஜாதி சான்று, செல்போன் எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை ஆகும். இந்த கார்டு பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா. முதலில் PMJAY என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு புதிய பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் பெயர்,வயது, பாலினம், ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். இதில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். முழு விண்ணப்ப படிவத்தையும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும். விண்ணப்பங்களை அதிகாரிகள் சரி பார்த்த பிறகு ஹெல்த் கார்டை பெறலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications