போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? 3 முக்கிய முடிவுகளை எடுத்த மத்திய அரசு
சென்னை: போஸ்ட் ஆபிசில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா, அப்படியென்றால் இனி நீங்கள் இதையெல்லாம் செய்யமுடியாது.
வங்கிகளை போல் தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். இதற்கு ஏடிஎம் கார்டு, பாஸ்புக் , நெட் பேங்கிங், செக் புக், மொபைல் பேங்கிங் என எல்லாம் கிடைக்கிறது.

அந்த வகையில் பலர் வங்கிகளை போல் தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்குகளை தொடங்குகிறார்கள். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டம் என்ற ஒன்று உள்ளது. இந்த திட்டத்தில்தான் தற்போது திருத்தம் ஏற்பட்டுள்ளது.
அதாவது சேமிப்பு கணக்கு தொடர்பாக 3 முக்கிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய மாற்றங்களில் கூட்டு கணக்கு (joint account) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திரும்ப பெறுதல், வட்டிச் செலுத்துதல் தொடர்பான விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த விதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசு அஞ்சலகத்தின் கூட்டுக் கணக்கு எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இதுவரை இருவர் மட்டுமே கூட்டுக் கணக்கை வைத்திருக்க முடியும். ஆனால் தற்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது 3 பேர் இணைந்து அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.
அஞ்சலக சேமிப்புக் கணக்கு திரும்பப் பெறுவதற்கான படிவத்தை மாற்றும் படிவம் 2 இல் இருந்து படிவம் 3 க்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் பாஸ்புக்கை காட்டியே தங்கள் கணக்கில் இருந்து குறைந்தபட்சம் ரூ 50 எடுக்கலாம். இதற்கு முன்னர் ரூ 50 எடுப்பதற்கு படிவம் 2வுடன் முறையாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட பாஸ்புக்கை சமர்ப்பித்தால்தான் கொடுக்கப்படும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது.
அது போல் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை செலுத்தும் விதி தொடர்பான புதிய விதிகளின்படி 10ஆவது நாள் மற்றும் மாத இறுதிக்குள் ஒரு கணக்கில் குறைந்த தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி அனுமதிக்கப்படும். கணக்கீடு செய்த பிறகு ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அது கணக்கில் வரவு வைக்கப்படும். அதே சமயம் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அந்த கணக்கு முடிந்த மாத இறுதியில் மட்டுமே அவரது கணக்கில் வட்டி செலுத்தப்படும்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications