டிக்கெட் செக்கிங் மட்டுமில்லை.. ரயிலில் டிடிஆருக்கு இவ்ளோ பொறுப்பு இருக்கா.. எப்படி புகார் அளிப்பது?
சென்னை: ரயில்களில் பயணிகளிடம் டிக்கெட் செக்கிங் செய்வது மட்டுமேதான் வேலை என்று பயணிகள் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், டிக்கெட் செக்கிங் மட்டும் இன்றி டிடிஇ -க்களுக்கு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு கடமைகளும் உள்ளன. அதுபற்றி இங்கே பார்ப்போம்.
இந்தியாவில் தினமும் 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். தொலைதூரங்களுக்கு செல்வது என்றால் ரயில் பயணத்தைதான் பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். ரயில்களில் ஏறியதும், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் (TTE) டிக்கெட் வைத்து இருக்கிறார்களா என சோதனை செய்து உறுதி செய்வார்.

டிக்கெட் பரிசோதகர்களின் பணி: டிக்கெட் பரிசோதகர் தன்னிடம் வைத்திருக்கும் லிஸ்ட்டில் உள்ள பயணிகள் தான், பயணம் செய்கிறார்களா? என்பதை உறுதி செய்வார். ரயிலில் டிக்கெட் பரிசோதகரின் பணி, டிக்கெட் செக்கிங் மட்டுமே என்று பல பயணிகளும் நினைக்கிறார்கள். ஆனால், டிடிஇ (டிக்கெட் பரிசோதகர்)களுக்கு டிக்கெட் செக் செய்வதை தவிர்த்து அவருக்கு வேறு பல பணிகளும் இருக்கின்றன. அது குறித்து இங்கே பார்க்கலாம்..
ரயில்வே விதிகளின் படி, ரயில்களில் கதவு முறையாக அடைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்வதோடு, களவு எதுவும் நடைபெறாமல் பாதுகாப்பதும் டிக்கெட் பரிசோதகரின் பணிதான். ரயில்வே விதிகள் manual-ல் உள்ள மேலும் சில விதிகளை இங்கே பார்க்கலாம்
கதவுகளை மூடுவது:
* ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் வரும் திசையில் உள்ள கதவுகளை மட்டுமே டிக்கெட் பரிசோதகர் திறக்க வேண்டும். மறுபக்கம் அதாவது பிளாட்பார்ம் இல்லாத பக்கத்தில் உள்ள கதவுகள் மூடியிருப்பதை உறுதி செய்வது டிடிஇ-க்களின் பணிதான். இதன் மூலம் பிளாட்பார்ம் இல்லாத பக்கத்தில் இருந்து பிற நபர்கள் ரயிலுக்குள் ஏற முடியாத நிலை ஏற்படும்.
* ரயில் புறப்பட்டதும் ரயிலின் கதவை மூடுவது என்பது டிக்கெட் பரிசோதரின் பொறுப்புதான். ஏதாவது ஒரு பயணி ரயிலின் கதவு அருகே சுற்றிக்கொண்டு இருந்தால் அவரை சீட்டில் இருக்க சொல்லும் உரிமை டிக்கெட் பரிசோதகருக்கு உள்ளது.
டிடிஇ-க்களுக்கு எதிராக புகார் அளிப்பது எப்படி?:
ரயிலில் பயணம் செய்யும் போது ரயில் நிலையங்கள் பற்றிய தகவல்களை பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதகர் அளிக்கவில்லை என்றால், பயணிகள் அவருக்கு எதிராக 139 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.
* எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்க விரும்பினால், 91-9717680982-என்ற எண்ணில் பயணிகள் புகாரினை டைப் செய்து அளிக்க முடியும்.
* ரயில்களில் சேவை குறைபாடு இருந்தால் @RailMinIndia என்ற எக்ஸ் கணக்கு மூலமாகவும் பயணிகள் புகாரினை தெரிவிக்கலாம்.
டிக்கெட் பரிசோதகரின் பிற பொறுப்புகள்:
ஸ்லீப்பர் கோச் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தங்கள் டூட்டியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டிக்கெட் பரிசோதகர்கள் உரிய யூனிபார்ம் அணிந்து இருப்பது ரயில்வே விதிகளின் படி கட்டாயம். பணி நேரத்தில் பெயருடன் கூடிய பேட்ஜும் அணிந்து இருக்க வேண்டும்.
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications