"ஜல்சக்தி அபியான்" சூப்பர் ப்ளான்.. மாநில பள்ளிக்கல்வித்துறைக்கு ஓடிவந்த உத்தரவு.. சபாஷ் மத்திய அரசு
சென்னை: மாநில பள்ளிக்கல்வித் துறைக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ள நிலையில், இதற்கு மாநில பள்ளிக்கல்வித்துறையும் இசைவு தெரிவித்துள்ளது. என்ன அது?
நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க "ஜல்சக்தி அபியான்" என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காரணம், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.. இந்த பிரச்னையை சரி செய்யவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும்தான், மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை செயல்படுத்த முனைந்தது.

நியமனம்: இதற்காக நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டது.. இதற்காகவே 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களையும் மத்திய அரசு நியமித்திருந்தது..
இவர்கள் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.. 255 மாவட்டங்களில் உள்ள 1592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி நீர் மட்டம்: அதுமட்டுமல்லாமல், ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விவசாய நிலையங்களில் வரப்பு அமைத்தல், மழை வளம் அதிகரிக்க மரம் வளர்க்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
நாடு முழுதும் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் வகையில், ஜல்சக்தி அபியான் திட்டத்தை, மத்திய அரசு துவக்கி செயல்படுத்திவரும்நிலையில், இன்னொரு முக்கிய வேண்டுகோளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜல்சக்தி அபியான் திட்டம்: அதில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் நோக்கம் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துதல், நீரை சேமித்தல், நீரை வீணாக்காமல் செலவழித்தல், குடிநீர் ஆதாரங்களை பேணுதல் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறையை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் தற்போது அறிவுறுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications