வியந்த தமிழ்நாடு.. கலர்ஃபுல் வசதிகளுடன் ரெடியான வந்தே மெட்ரோ ரயில்கள்.. சென்னை ஐசிஎப் செம மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை, இன்னொரு புதிய சாதனையை படைக்க போகிறது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. அதனால்தான், இங்கு இப்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
Do you know When will Vande Metro Rail Construction Work completed and what did Chennai ICF officials say about it


வந்தே பாரத்:
அந்தவகையில், வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பிலும், பயணிகளின் அபார ஆதரவை இந்த ஐசிஎப் பெற்று வருகிறது.. வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்புகளின் அடுத்தடுத்த விரிவாக்கமும் நடந்து வருகிறது.. இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன..

துரிதமான பணிகள்: மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறதாம். அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான, ஆரம்பக்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தவிர சாதாரண வந்தே பாரத் என்று சொல்லக்கூடிய அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே 2 ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், கூடுதலாக அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒருபக்கம் அம்ரித் பாரத் (சாதாரண வந்தே பாரத்)ரயில், இன்னொரு பக்கம் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் என சென்னை ஐசிஎப் பம்பரமாக சுழன்று வருகிறது.. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த சில மாதங்களாக முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், அந்த பணிகளும் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாம்.

அதிகாரிகள்: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் குறுகியதூரத்துக்கு இயக்கும் வகையிலான வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகள் நடந்து முடிந்துவிடும்.. ரயில்வே வாரியத்திடம் வந்தே மெட்ரோ ரயிலை ஒப்படைக்க உள்ளோம்.

AC வசதி, பயணிகளை கவரும் உள்அலங்காரம், சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். தேவைக்கு ஏற்ப, 8 முதல் 12 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 100பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.

எகிறும் எதிர்பார்ப்பு: இத்தனை வசதிகளுடன் இந்த மாதமே இறுதிக்கட்ட பணிகள் முடிந்துவிடும் என்று சொல்லியிருப்பதால், வந்தே மெட்ரோ ரயில்கள் மீதான எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+