ஓஹ்ஹோ.. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க காரணமே வேறயாமே.. இது பாஜகவுக்கு தெரியுமா?.. திணறும் யூகம்
ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது ஏன் என்ற தகவல்கள் வட்டமடித்து வருகின்றன
சென்னை: எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே எதற்காக, ஆளுநரை சந்தித்து பேசியிருப்பார் என்பதற்கான யூகங்கள், தமிழக அரசியலை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
ஆளும் திமுகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலையும் அப்போது வாசித்திருக்கிறார்.

ஃபோகஸ்
வழக்கமாக ஆளும்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்வதும், புகார்களை வாசிப்பதும் இயல்புதான் என்றாலும், இந்த முறை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்ததன் பின்னணி மட்டும் பலவாறாக சொல்லப்படுகிறது.. இதுகுறித்த ஹாட் யூகங்களும் இன்னும் அடங்கவில்லை.. சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் முறைகேடுகள் என திமுக மீதான புகார்களை எடப்பாடி தரப்பு லிஸ்ட்டாக தந்துள்ளது என்றாலும், 2 விதமான அனுமானங்கள் இந்த சந்திப்பு குறித்து வட்டமடிக்கிறது.

நொறுங்கிய கணக்கு
முதலாவதாக, பாஜகவுக்கே அதாவது அண்ணாமலைக்கே செக் வைக்கும் வகையில்தான் இந்த சந்திப்பு நடந்ததாக சொல்கிறார்கள்.. நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று இந்த 6 மாத காலமாகவே அண்ணாமலை மாய தோற்றத்தை அழுத்தமாக விதைத்துவிட்ட நிலையில், இதை நொறுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாம்.. அதனால்தான், கடந்த சில தினங்களாகவே, ஓபிஎஸ், தினகரன் பற்றியெல்லாம் பேட்டிகளை தராமல், முழு ஃபோகஸ்ஸையும் திமுக மீது திருப்பி உள்ளாராம் எடப்பாடி.. ஆளுநர் வரை புகார்களை தந்து, தாங்கள்தான் நிஜமான எதிர்க்கட்சி என்பதையும் நிரூபிக்க முயற்சித்துள்ளார் என்கிறார்கள்.

"பெஸ்ட்" ஆளுநர்
இரண்டாவதாக, ஆளுநருக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காகவே, எடப்பாடியின் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள்.. சில தினங்களாகவே திமுகவும், கூட்டணி கட்சிகளும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக தாம் இருப்பதை காட்டிக் கொள்ளவே, எடப்பாடி நேரடியாக சந்தித்ததுடன், "சிறந்த ஆளுநர்" என்ற பாராட்டு பத்திரத்தையும் வாசித்திருக்கிறாராம்.. இது ஆளுநர் மாளிகையை குளிரவைப்பதுடன், டெல்லி வரை இந்த மெசேஜ் பாயும் என்றும் நினைக்கிறாராம் எடப்பாடி.

சாப்ட் கார்னர்
இறுதியில், ஒரு சாஃப்ட் கார்னர் வரும்பட்சத்தில், மேலிட கவனம் தன்மீதுதிரும்பும் என்றும், அதன்மூலம் இரட்டை இலையை தக்க வைத்துக் கொள்ள இயலும் என்பதே எடப்பாடியின் கணக்காக உள்ளதாம். இப்படி ஆளுநர் - எடப்பாடி குறித்து 2 விதமான அனுமானங்கள் வட்டமடித்து வந்தாலும், ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, ஆளுநரோ, மோடியோ, அமித்ஷாவோ, எடப்பாடியை மட்டுமே அதிமுகவாக கருதி, ஆதரவு தரமாட்டார்கள் என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல்நோக்கர்கள்..!!
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications