எந்த மாநிலத்தில் வேணாலும் இருங்க! புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா, அதை எளிதாக விண்ணப்பிக்க என்னென்ன வழிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அரசு கொடுத்து வருகிறது.

கொரோனா காரணமாக அரசு சில இலவச பொருட்களை கொடுத்து வருகிறார்கள். இதற்காக ரேஷன் திட்டத்தின் கீழ் நியாய விலை பொருட்கள் பெற மக்கள் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். அரசால் வழங்கப்படும் ரேஷனைப் பெற ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது போலவே, ரேஷன் கார்டு வைத்திருப்பதும் மக்களுக்கு முக்கியம்.
இதன் மூலம்தான் ரேஷனில் கொடுக்கும் பொருட்களை பெற முடியும். இந்த ரேஷன் பொருள் விநியோகம் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும். தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா நிவாரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ 4000 இரு தவணைகளாக வழங்கப்பட்டது. அது போல் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ 1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இது போல் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் கொள்கை முடிவுகளுக்கேற்ப ரேஷன் பொருட்களை வைத்திருக்கிறது. தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டமும் தொடங்க போவதாக சொல்லப்படுகிறது. எனவே ஒரு கார்டை வாங்கினாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ரேஷன் வினியோகம் செய்யும் உரிமை மாநில அரசுகளின் கையில் இருப்பதால், ரேஷன் கார்டு தயாரிக்கும் பணியும் மாநில அரசின் கீழ் வரும். ரேஷன் கார்டு தயாரிப்பதற்கான போர்டல் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் வேறுபட்டது. நீங்கள் தமிழ்நாட்டில் வசித்தால் தமிழக அரசின் இணையதளமான https://tnpds.gov.in/ சென்று விண்ணப்பிக்கலாம். இந்த போர்ட்டல்களில், பெயர், முகவரி மற்றும் வருமானத் தகவல்களைக் கொடுக்க வேண்டும். தகவல் சரியாக இருந்தால் உங்கள் ரேஷன் கார்டு செய்து தரப்படும்.
ஆன்லைன் ரேஷன் கார்டை பெற சில முக்கியமான ஆவணங்கள் தேவை. இதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டு முகவரிக்கான சான்றாக மின்சாரம் அல்லது தண்ணீர் ரசீது எடுத்துக் கொள்ளலாம். ரேஷன் கார்டு பெற, வருமானச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக க்யூ-ஆர் கோடு மூலம் நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுகொள்ளும் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 65 கடைகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications