குதூகலிக்கும் கூறுகெட்ட மூளை! கொகெய்னை விட மோசமானது இனிப்பு! சுகர் ப்ரீயும் வேண்டாம்.. டாக்டர் பரூக்
சென்னை: இனிப்பு சுவையை நாம் நாள்தோறும் எடுத்துக் கொண்டால் அந்த சுவைக்கு நம் நாக்கு அடிமையாகி தினந்தோறும் கேட்கும். இதனால் நம் உடல்நிலை பாதிக்கப்படும் என சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இனிப்பு என்பது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒரு சுவை அன்று. அது என்றோ ஒரு நாள் கிடைத்தால் தான் அதற்கு மரியாதை. அதற்கு மேல் இனிப்பு சுவை அனுதினமும் கேட்பது மூளையில் ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கி விட்டதன் அர்த்தம்.
மூளையில் பரிசில் தரும் மையம் உள்ளது. அதை Reward centre என்று கூறுவோம். மதிமயக்கும் விசயம் ஒன்றை நாம் செய்தால் அது பரிசில் தரும் இடத்தைத் தூண்டும். பிறகு மீண்டும் மீண்டும் அதையே செய்யச் சொல்லி மூளை நம்மை கட்டாயப்படுத்தும். மூளைக்கு அது நமது உடலுக்கு நன்மையான காரியமா? தீமை தரும் காரியமா? என்றெல்லாம் தெரியாது.

குதூகலிக்கும்
தனக்கு விருப்பமான தன்னை குதூகலத்தில் ஆற்றும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யச்சொல்லி நம்மை உந்தும் இந்த கூறுகெட்ட மூளை. போதைப் பொருட்களான மது, கொகெய்ன் போன்றவை போலவே இந்த இனிப்பு சுவையும் அதிகமான அளவு மூளையின் பரிசில் தரும் மையத்தை தூண்டுகிறது. இன்னும் சொல்லப்போனால் கொகெய்ன் போதைப் பொருளை விட சில மடங்கு அதிகமாக நாம் அனுதினம் உண்ணும் சீனி/சர்க்கரை போன்ற இனிப்பு சுவை தரும் உணவுகள் தூண்டுகின்றன என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இனிப்பு சுவை
இந்த இனிப்பு சுவை இவ்வாறு மூளைக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துகின்றது. இதில் இருந்து எப்படி வெளியே வருவது? என்னதான் மூளை அடம்பிடித்தாலும் இனிப்பு உண்பதை ஒரு மாதம் நிறுத்தி விட்டால் தானாக மூளை வழிக்கு வந்துவிடும். கடந்த 6½ ஆண்டுகளாக நான் இனிப்பு சுவை தரும் எந்த உணவையும் பொருளையும் உண்டதில்லை. எனவே இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.

வரம்பு மீறல்
எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா??? நாட்டு சர்க்கரை போட்டால் ரத்த சர்க்கரை அளவு ஏறாது என்று நம்பும் பெரியோரே தாய்மாரே பாட்டிமாரே தாத்தாமாரே நீங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
சுகர் ஃப்ரீ போடுகிறேன் என்று கூறும் அண்ணன்மாரே அக்காமாரே தாங்கள் தங்களுக்கே தெரியாமல் அந்த இனிப்புக்கான அடிமைத்தனத்தை வளர்த்து வருகிறீர்கள்.

அடிமைத்தனம்
இது உங்களை திரும்ப திரும்ப இனிப்பை எடுக்கச் சொல்லி உந்தும். உங்களால் இனிப்புக்குண்டான அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வரவே முடியாது. நீரிழிவு நோயர்களே.. தயவு செய்து இனிப்பு சுவை தரும் அத்தனை உணவுகளையும் இன்றிலிருந்து ஒரு மாதம் நிறுத்துங்கள். அதற்குப்பின்பு இனிப்பு கலக்காத பாலில் உள்ள தித்திப்பைக்கூட உங்கள் நாவின் சுவை அரும்புகள் உங்களுக்கு காட்டும்.

இனிப்பு சுவை
இனிப்பு சுவை என்பது மனிதனின் உடலுக்கு தீது உண்டாக்கவல்லது. அதை மருந்தைப்போல எப்போதாவது பண்டிகைகளின் போது எடுக்கலாம். தேன் கூட மருந்து தான். அதை தினமும் எடுப்பது தவறு. நம் முன்னோர்கள் எந்த காலத்திலும் நம்மைப்போல தினமும் சீனி/சர்க்கரை கலந்த இனிப்புகளை கண்டதுமில்லை. உண்டதுமில்லை இட்லி தோசை கூட ஆடம்பரமாக பண்டிகைகளுக்கு மட்டுமே வீட்டில் செய்யப்பட்ட காலங்கள் உண்டு.

இட்லி தோசை
இன்று தினமும் இட்லி தோசை உண்ணாத வீடுகள் இல்லை. பப்ஸ் சமோசா டொரினோ கலர் போன்றவை எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் வீட்டுக்குள் வரும். ஆனால் இன்று நமது குளிர்சாதனப் பெட்டிகளில் எங்கும் குளிர்பானங்கள் மாலை நேர ஸ்நேக்ஸாக இத்தனை பண்டங்கள். அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இனிப்பு சுவை. நாம் இந்த இனிப்பு சுவைக்கு பிறந்த குழந்தை முதற்கொண்டு அடிமைப்படுத்துகிறோம். ஆறு மாதம் வரை நன்றாக பால் பருகி எடை கூடிய குழந்தை அதற்குப்பிறகு பிஸ்கட்/ இனிப்பு கலந்து பால் / இனிப்பு கலந்த உணவுகள் கொடுக்கப்பட்டு அதற்கு அடிமையாக்கப்படுகின்றன.

இனிப்பு இல்லாத உணவுகள்
பிறகு இனிப்பு இல்லாத உணவுகளை அவை உட்கொள்ள மறுக்கின்றன. இவற்றை நாம் கண்கூடாக நமது இல்லங்களில் காண முடியும். இனிப்பு என்பது மருந்து போன்றது. இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக் கொள்ளலாம். பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி கடைபிடிக்க முடிந்தால் இன்னும் சிறப்பு. இவ்வாறு பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications