திருப்பத்தூரில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை.. முதல்வர் ஸ்டாலின் விசிட்டால் கலெக்டர் ஆர்டர்!
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஜூன் 25, 26 ஆகிய நாட்களில் டிரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் ஜூன் மாதம் 25 ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகிறார். அன்று திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து 26 ஆம் தேதி காலை 4 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 25, 26 ஆகிய 2 நாட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications