Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Recommended Video

    எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் ரெய்டு… 58 இடங்களில் அதிகாரிகள் சோதனை!

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக மேலும் ஒரு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.

    மீண்டும் ரெய்டு

    மீண்டும் ரெய்டு

    இந்த வழக்கின் அடிப்படையில் இன்று எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

    மொத்தம் 58 இடங்கள்

    மொத்தம் 58 இடங்கள்

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 13 பேர், 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை புதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் ரெய்டு

    சென்னையில் ரெய்டு

    சென்னை மயிலாப்பூர் சாய்பாபா காலனியில் உள்ள கோன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனம், சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம், சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஶ்ரீபிரியன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை நந்தனம் சி.ஐ.டி.நகரில் உள்ள ஶ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெரு வானம் அபார்ட்மெண்ட்ஸில் ஜெயபிரகாஷ் மகனும் கோன்ஸ்ட்ரோனிக்ஸ் நிறுவன முன்னாள் பங்குதாரருமான விஷ்ணுவர்தன் வீடு, கோன்ஸ்ட்ரோனிக்ஸ் நிறுவன முன்னாள் பங்குதாரர் அ.சரவணக்குமார் வீடு மற்றும் மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் காவல்துறை அதிகாரி எல்.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    கோவையில் ரெய்டு

    கோவையில் ரெய்டு

    கோவையில் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கே ஜெயராமன், சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமலை சண்முகம், ராஜேந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளாக இருந்த அனிதா, சண்முகம், லோகநாதன், சந்திரகாந்தா ஆகியோரது வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+