மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக மேலும் ஒரு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.

மீண்டும் ரெய்டு
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மொத்தம் 58 இடங்கள்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 13 பேர், 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை புதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் ரெய்டு
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா காலனியில் உள்ள கோன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனம், சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம், சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஶ்ரீபிரியன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை நந்தனம் சி.ஐ.டி.நகரில் உள்ள ஶ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெரு வானம் அபார்ட்மெண்ட்ஸில் ஜெயபிரகாஷ் மகனும் கோன்ஸ்ட்ரோனிக்ஸ் நிறுவன முன்னாள் பங்குதாரருமான விஷ்ணுவர்தன் வீடு, கோன்ஸ்ட்ரோனிக்ஸ் நிறுவன முன்னாள் பங்குதாரர் அ.சரவணக்குமார் வீடு மற்றும் மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் காவல்துறை அதிகாரி எல்.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

கோவையில் ரெய்டு
கோவையில் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. கே ஜெயராமன், சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமலை சண்முகம், ராஜேந்திரன் ஆகியோரின் வீடு மற்றும் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளாக இருந்த அனிதா, சண்முகம், லோகநாதன், சந்திரகாந்தா ஆகியோரது வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்












Click it and Unblock the Notifications