லெட்டர் பேடு கட்சிகளுக்கு இனி ஆப்பு... 25 ஆயிரம் உறுப்பினர்கள் தேவை - சாட்டையை சுழற்றிய நீதிபதிகள்
25ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் தான் அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து கூறியுள்ளது.
சென்னை: 25ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் தான் அரசியல் கட்சி என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது என்று கேட்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்களாக தேர்தல் ஆணையம், உள்துறை, சட்டத்துறை சேர்க்கப்பட்டு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ் நேசன் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் திருச்சியில் இயங்கி வரும் ஆக்சிஜன் சிலிண்டர் கேஸ் நிறுவனத்தை மூட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய தமிழ் நேசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். அத்துடன் மனுதாரரின் கட்சி எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லெட்டர் பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத சில லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
லெட்டர்பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்சினைகளை சந்திப்பதால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தேவை என்றும் கூறிய நீதிபதிகள், புதிய அரசியல் கட்சி தொடங்க எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது என்று கேள்வி எழுப்பினர்.
லெட்டர் பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்சனைகளை சந்திப்பதால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தேவைப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறி, எதிர்மனுதாரர்களாக தேர்தல் ஆணையம், உள்துறை, சட்டத்துறையை சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications