Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாயிண்ட்! திருப்பி அனுப்பிட்டாங்கள்ல.. “எடப்பாடி தனிக்கட்சி தொடங்கப்போறார்” வைத்திலிங்கம் ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதை திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை திருப்பி அனுப்பினால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்று அர்த்தம். அதிமுகவில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்று தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை எனக்கூறி அக்கடிதத்தை அதிமுக நிர்வாகிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தனிக்கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ளார் வைத்திலிங்கம்.

அதிமுகவுக்கு அழைப்பு

அதிமுகவுக்கு அழைப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளாகப் பிரிந்துள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தான் தான் என எடப்பாடியும் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியதோடு, மாநில தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளித்தது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் ரிமோட் வோட்டிங் பற்றிய விளக்கக் கூட்டத்திற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது. இதனை ஓபிஎஸ் தரப்பு வரவேற்றது.

திருப்பி அனுப்பிய ஈபிஎஸ் டீம்

திருப்பி அனுப்பிய ஈபிஎஸ் டீம்

இந்தக் கடிதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை எனக் கூறி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிஎஸ் தரப்பு பங்கேற்காது?

ஈபிஎஸ் தரப்பு பங்கேற்காது?

இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் போட்டு ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை ஈபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி தரப்பு பங்கேற்காது எனக் கூறப்படுகிறது.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இதுஒருபுறம் இருக்க, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துபிட்டார். தற்போது ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் ஆகியோரே இருக்கின்றனர் என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இன்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக (ஒபிஎஸ் அணி) அலுவலகத்தில்வைத்திலிங்கத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி தனிக்கட்சி

எடப்பாடி தனிக்கட்சி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய ஆவணங்களின்படி, தமிழக தேர்தல் ஆணையம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதை திருப்பி அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அதை திருப்பி அனுப்பினால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு தனிக்கட்சி தொடங்கப் போகிறார். அதிமுகவில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

 ஓபிஎஸ் விடுத்த சவால்

ஓபிஎஸ் விடுத்த சவால்

சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனிக்கட்சி தொடங்க தயாரா என சவால் விடுத்துப் பேசி இருந்தார். அதற்கு எடப்பாடி தரப்பினர், அதிமுக எங்களிடம் தான் இருக்கிறது, ஓபிஎஸ் வேண்டுமானால் புதிதாக கட்சி தொடங்கட்டும் என பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவுக்கு அனுப்பிய தேர்தல் ஆணைய கடிதத்தை திருப்பி அனுப்பி இருப்பதால், ஈபிஎஸ் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+