ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்றாம், இறுதிக்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் திருவிக நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இரு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான நட்சத்திர வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சூழலில், இரண்டாம் கட்டமாக 127 பேர் கொண்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் 46 சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் 17 பெண் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 150 பேரில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டுமே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று மூன்றாம், இறுதிக்கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் திருவிக நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளார். சென்னையில் 12 தொகுதிகள் உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவுக்குப் பிறகு, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மாநிலத் தலைவர் ஆனந்தன் என்பவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ஏப்ரல் 2025-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, இவரைப் பொறுப்பிலிருந்து நீக்கி இருந்தர். தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 5, 2025 அன்று, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' (Tamil Maanila Bahujan Samaj) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
தற்போது தனது புதிய கட்சியின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், தனது கணவரின் படுகொலைக்கு நீதி கோரியும் பொதுவாழ்வில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் தான் இன்று அவருக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்?












Click it and Unblock the Notifications