தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகள் இவைதான்.. வெளியிட்டது தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 2-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேனி மாவட்டத்தை பொருத்தமட்டில் தேனி மக்களவைத் தொகுதி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
10 பெட்டிகளில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தருமபுரி, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, தேனி ஆகிய இடங்களில் உள்ள 13 வாக்குச் சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
இந்த நிலையில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் இடங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திருவள்ளூரில் பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்த 195-ஆவது வாக்குச் சாவடி
தருமபுரி எம்பி தொகுதிக்குட்பட்ட 181, 182,192,193, 194, 195, 196, 197 ஆகிய 8 வாக்குச் சாவடிகள்.
கடலூர் தொகுதியில் பண்ருட்டியில் திருவதிகை நகராட்சி பள்ளியில் உள்ள 210-ஆவது வாக்குச் சாவடி.
ஈரோடு தொகுதியில் காங்கேயம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் 248-ஆவது வாக்குச் சாவடி
தேனி தொகுதியில் ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் அரசு பள்ளியில் 67-ஆவது வாக்குச் சாவடி, பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி, சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி.
ஆகிய வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications