Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: மாப்ள அவரு தான்.. ஆனா சட்டை எங்களோடது! எடப்பாடியை நெருக்கும் பாஜக! அதகளமான அதிமுக.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு மறைமுக நெருக்கடிகள் டெல்லி தலைமையால் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கீடு, குறிப்பிட்ட தொகுதிகள் என அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வரும் பாஜக தற்போது ராஜ்யசபா சீட்டு விவகாரத்திலும் தலையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கூட்டணி சேர்த்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் சில கட்சிகள் வெளியேறி விட்டன. 2021 சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்ட நிலையில், அதிமுக ஓரளவு கௌரவமான தொகுதிகளை பெற்றது.

அதற்கு பிறகு மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி உடைந்தது. அதற்கு அண்ணாமலை தான் காரணம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி அவசியம் என கருதியை டெல்லி தலைமை நயினார் நாகேந்திரன் மூலம் காய்களை நகர்த்தியது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Amit Shah

அதிமுக பாஜக கூட்டணி

அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழக பாஜ கஉடன் அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி பலமாக வேண்டும் என்றால் கூடுதலாக சில கட்சிகளை அழைத்து வர வேண்டும் என பாஜக விரும்பியது. டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜக வலியுறுத்திய நிலையில், டிடிவி தினகரனை மட்டும் கூட்டணியில் ஏற்றுக்கொண்டார் என சொல்லிவிட்டார்.

பாஜக

எடப்பாடி தொடர்ந்து பாமகவும் கூட்டணிக்குள் வந்துவிட்டது. இதற்கிடையே 60 சீட்டு வேண்டும் என பாஜக கேட்பதாக கோவில் தொகுதிகளை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுக பலமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது கூடுதல் நெருக்கடியாக மாநிலங்களவை சீட்டு விவகாரத்திலும் டெல்லி தலைமை நேரடியாக தலையிட்டதாக சொல்கின்றனர்.

மாநிலங்களவை சீட்டு

மார்ச் மாதம் மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 6 எம்பி பதவிகள் தமிழகத்தில் காலியாகிறது. நான்கு எம்பி சிட்டுகள் திமுகவுக்கு உறுதியாக கிடைக்கும் அதிமுகவுக்கு இரண்டு சீட்டுகள் கிடைக்கும். அதில் ஒன்றை பாமகவுக்கு தருவதாக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது சீட்டை யாருக்கு தருவது என்பதுதான் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி. அந்த ஒரு சீட்டால்தான் தேமுதிக கூட்டணிக்கு சென்று விட்டது.

டிடிவி தினகரன்

இதற்கிடையே ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆன ஜிகே வாசன் அதனை எதிர்பார்க்கிறார். டிடிவி தினகரன் தேர்தலில் நிற்கப் போவதில்லை என அறிவித்திருக்கும் நிலையில் அவரது மனைவியை ஆண்டிப்பட்டி அல்லது தேனியில் நிறுத்தலாம் என சொல்லப்படுகிறது. மேலும் ராஜசபா சீட்டை குறி வைத்துதான் டிடிவி தினகரன் கை நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஜி கே வாசன், டிடிவி தினகரன் என இருவரும் சீட்டை கேட்கும் நிலையில் ஏற்கனவே எம்பியாக இருக்கும் தம்பிதுரை அந்த சீட்டை எதிர்பார்க்கிறார்.

ராஜ்யசபா சீட்டு

இதற்கிடையே ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுத்துவிட வேண்டாம் என நேரடியாக அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மாநிலங்களவை எம்பி சீட்டை எதிர்பார்க்கும் நிலையில் அதிமுகவுக்கு கொடுத்து விட்டால் கூட்டணி உடைபட வாய்ப்பு இருக்கிறது. எனவே, எதுவாக இருந்தாலும் பேச முடிவெடுத்துக் கொள்ளலாம் என சொன்னாராம். ஏற்கனவே கட்சி பாதி தனது கட்டுப்பாட்டில் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி புலம்பி வரும் நிலையில் பாஜகவின் அழுத்தத்தால் அவருக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+