நடுவானில் தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக சென்னையில் தரையிறக்கிய விமானி
Recommended Video
தோஹா புறப்பட்ட விமானத்தில் மின் கசிவு.. சாதுர்யமாக தரையிறக்கிய விமானி-வீடியோ
சென்னை: சென்னையிலிருந்து தோஹா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து தோஹாவுக்கு இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 240 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் நடுவானில் சென்ற போது அந்த விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவை கண்டுபிடித்த விமானி அவசர அவசரமாக விமானத்தை சென்னையில் தரையிறக்கினார்.
விமானி சாதுர்யமாக தப்பித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 240 பயணிகளும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
Comments
English summary
Electric leakage found in Indigo flight which plies from Chennai to Doha. After finding this pilot landed the flight safely in Chennai.
Story first published: Saturday, September 21, 2019, 8:03 [IST]